பதிவு செய்த நாள்
06 ஏப்2017
09:49
மும்பை : நேற்று அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தைகள், இன்று சரிவுடன் துவங்கி உள்ளனர். பங்குச்சந்தைகளில் நேற்றைய உயர்வு தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதாலும், ரிசர்வ் வங்கியின் பணக்கொள்ளை குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளதாலும் சரிவுடன் துவங்கி உள்ளன. உலக பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியும் இந்திய பங்குச்சந்தைகளின் சரிவிற்கு காரணமாக கூறப்படுகிறது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஏப்ரல் 06, காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 117.91 புள்ளிகள் சரிந்து 29,856.33 புள்ளிகளாகவும், நிப்டி 36.60 புள்ளிகள் சரிந்து 9228.55 புள்ளிகளாகவும் உள்ளன. ஹச்டிஎப்சி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனும், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|