பதிவு செய்த நாள்
09 ஏப்2017
01:16
புதுடில்லி : வலைதள சந்தை நிறுவனமான, ‘பிளிப்கார்ட்’ மீண்டும், மளிகை பொருட்கள் விற்பனையில் களமிறங்க திட்டமிட்டு உள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:இந்தியாவில், பொதுமக்கள் அதிகம் வாங்கும் பொருட்களில், 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட பங்களிப்பை, மளிகை பொருட்கள் கொண்டுள்ளன. இச்சந்தையின் மதிப்பு, 40 – 60 கோடி டாலராக உள்ளது. இதனால், மீண்டும், மளிகை பொருட்கள் பிரிவில் களமிறங்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.பிளிப்கார்ட் நிறுவனம், 2015 அக்டோபரில், ‘நியர் பை’ எனும் பிரிவை துவக்கி, பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட மளிகை பொருட்களின் விற்பனையில் ஈடுபட்டது. இது, வாடிக்கையாளர்களிடையே வரவேற்பை பெறாததால், சில மாதங்களிலேயே இச்சேவை நிறுத்தப்பட்டது.தற்போது, ‘அமேசான்’ நிறுவனம், ‘அமேசான் பேன்ட்ரி’ எனும் பிரிவின் கீழ், மளிகை பொருட்களை விற்பனை செய்கிறது. இதற்கு போட்டியாக, பிளிப்கார்ட் நிறுவனம், மீண்டும் இச்சந்தையில் இறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|