மளிகை பொருட்கள் விற்பனை மீண்டும் களமிறங்கும் ‘பிளிப்கார்ட்’மளிகை பொருட்கள் விற்பனை மீண்டும் களமிறங்கும் ‘பிளிப்கார்ட்’ ... கனவு வீடு தேடலில் உதவும் இணைய ஆய்வு கனவு வீடு தேடலில் உதவும் இணைய ஆய்வு ...
இந்திய கைவினைஞர்களை கை துாக்கி விட ஆடம்பர பொருட்கள் துறையினர் ஆதரவு தேவை - மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2017
01:17

புதுடில்லி : ‘‘இந்­திய கைவி­னை­ஞர்­களின் தயா­ரிப்­பு­களை, சர்­வ­தேச சந்­தைக்கு கொண்டு செல்ல, ஆடம்­பர பொருட்­கள் துறை­யி­னர் முன்­வர வேண்­டும்,’’ என, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் வலி­யு­றுத்தி உள்­ளார்.பிர­பல, ‘பிராண்டு’ நிறு­வ­னங்­களின் நவ­நா­க­ரிக ஆடை­கள், அணி­க­லன்­கள் உள்­ளிட்­ட­வற்றை கொண்ட, ஆடம்­பர பொருட்­கள் துறை­யின் கருத்­த­ரங்­கம், டில்­லி­யில் நடை­பெற்­றது. அதில், அமைச்­சர் பங்­கேற்று பேசி­ய­தா­வது:கடந்த, 2014 நில­வ­ரப்­படி, சர்­வ­தேச ஆடம்­பர பொருட்­களின் சந்தை மதிப்பு, 2 லட்­சம் கோடி டால­ராக உள்­ளது. இதில், இந்­தியா, பிரே­சில், ரஷ்யா, சீனா மற்­றும் தென் ஆப்­ரிக்­காவை உள்­ள­டக்­கிய, ‘பிரிக்ஸ்’ நாடு­களின் பங்­க­ளிப்பு, 30 சத­வீ­த­மாக உள்­ளது.இந்­தி­யா­வில், ஆடம்­பர பொருட்­கள் சந்தை, வேக­மாக வளர்ச்சி கண்டு வரு­கிறது. தற்­போது, 700 – 800 கோடி டால­ராக உள்ள, இச்­சந்­தை­யின் மதிப்பு, அடுத்த எட்டு ஆண்­டு­களில், 10 ஆயி­ரம் கோடி டால­ராக உய­ரும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. ‘பிரிக்ஸ்’ நாடு­களில், இந்­தியா மட்­டுமே, 7.2 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மான பொரு­ளா­தார வளர்ச்­சி­யுடன் விளங்­கு­கிறது.சமூ­கத்­தில் உயர்ந்த அந்­தஸ்தை பெறும் இலக்­கு­டன் முன்­னே­றத் துடிக்­கும் இந்­தி­யர்­கள், ஆடம்­பர பொருட்­கள் துறை­யின் வளர்ச்­சிக்கு உத­வு­வர்.இந்­தி­யா­வில் உயர் வரு­வாய் பிரி­வி­ன­ரின் எண்­ணிக்கை பெருகி வரு­கிறது. அடுத்த ஐந்து ஆண்­டு­களில், உல­கின் பெரும் பணக்­கா­ர­ர்­களில், 6 சத­வீ­தம் பேர், இந்­தி­யர்­க­ளாக இருப்­பர்.இத்­த­கை­யோ­ரின் பங்­க­ளிப்­பால், ஆடம்­பர பொருட்­கள் சந்தை மேலும் விரி­வ­டை­யும்; இத்­துறை நிறு­வ­னங்­களின் வளர்ச்­சிக்கு வழி­வ­குக்­கும்.அதே சம­யம், ஆடம்­பர பொருட்­கள் தயா­ரிப்பு, விற்­பனை ஆகி­ய­வற்­றில் ஈடு­பட்டு வரும் நிறு­வ­னங்­கள், உள்­நாட்டு கைவி­னை­ஞர்­களை ஊக்­கு­வித்து, அவர்­களின் படைப்­பு­களை அதி­க­ள­வில் சந்­தைப்­ப­டுத்த முன்­வர வேண்­டும்.இந்­திய கைவி­னை­ஞர்­கள், உல­கத் தரம் வாய்ந்த கைவி­னைப் பொருட்­களை உற்­பத்தி செய்­கின்­ற­னர். அத்­த­கைய பிர­மா­த­மான ஆற்­றல் உள்­ளோர், மகாத்மா காந்தி ஊரக வேலை­வாய்ப்பு உறுதி திட்­டத்­தின் கீழ், குறைந்­த­பட்ச ஊதி­யம் பெறு­வ­தற்­காக, நீண்ட வரி­சை­யில் காத்­தி­ருப்­பது வேதனை அளிக்­கிறது. இந்­திய கைவி­னை­ஞர்­களை ஆடம்­பர துறை­யி­னர் கை துாக்கி விட வேண்­டும்.இந்­தி­யா­வின் பல்­வேறு பகு­தி­களில் உள்ள கைவி­னை­ஞர்­களை அடை­யா­ளம் கண்டு, அவர்­களின் படைப்­பு­க­ளுக்கு உரிய மரி­யா­தையை ஏற்­ப­டுத்தி தர வேண்­டும்.குறிப்­பாக, இந்­திய கைவி­னை­ஞர்­களின் கலை படைப்­பு­களை, சர்­வ­தேச சந்­தைக்கு கொண்டு செல்ல வேண்­டும். இதன் மூலம், கைவி­னை­ஞர்­கள் ஏற்­றம் பெறு­வர். கைவி­னை­ஞர்­க­ளுக்கு உரிய அங்­கீ­கா­ரம் கிடைக்க வேண்­டும். அரசு மட்­டுமே கைவி­னை­ஞர்­களின் வளர்ச்சிக்கு உதவ முடி­யாது. அவர்­களின் படைப்­பு­க­ளுக்­கும், சந்­தைக்­கும் உள்ள இடை­வெ­ளியை நிரப்ப, உள்­நாட்டு நிறு­வ­னங்­களின் துணை மிக­வும் அவ­சி­யம்.ஆடம்­பர துறை நிறு­வ­னங்­கள், கைவி­னை­ஞர்­களின் படைப்­பு­களை அதி­கம் கொள்­மு­தல் செய்ய வேண்­டும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)