பதிவு செய்த நாள்
18 ஏப்2017
03:57
புதுடில்லி : கோத்ரெத் பிராப்பர்டீஸ், தாஜ் குழுமம் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. கோத்ரெஜ் குழுமத்தைச் சேர்ந்த, கோத்ரெஜ் பிராப்பர்டீஸ், ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனம், 12 நகரங்களில், குடியிருப்பு, வணிக வளாகம் மற்றும் நகரமைப்பு என, 13.30 கோடி சதுர அடியில், கட்டுமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆசிய நாடுகளில், ஓட்டல் துறையில், தாஜ் குழுமம் முன்னணியில் உள்ளது. இதற்கு, இந்தியா, வட அமெரிக்கா, இங்கிலாந்து, மலேஷியா, இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில், 62 இடங்களில், 99 ஓட்டல்கள் உள்ளன.கோத்ரெஜ் பிராப்பர்டீஸ், மஹாராஷ்டிர மாநிலம், விக்ரோலியில், கட்டுமான திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. அதில், ஓட்டலை பராமரிக்க, தாஜ் ஓட்டல்ஸ் பேலசஸ் ரிசார்ட்ஸ் சபாரிஸ் உடன் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, கோத்ரெஜ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மும்பையில், 35 ஏக்கரில், குடியிருப்பு, அலுவலகம், ஓட்டல் ஆகியவற்றை உள்ளடக்கிய கட்டுமான திட்டங்களை அமைத்து வருகிறோம். அதில், 150 விருந்தினர் அறைகளை, தாஜ் குழுமம், சர்வதேச தரத்தில் பராமரிக்க உள்ளது’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|