பதிவு செய்த நாள்
16 ஏப்2017
02:01
புதுடில்லி : கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், வணிக முத்திரை உரிமம் கோரி, அன்னிய நிறுவனங்கள் அளித்துள்ள விண்ணப்பங்கள், முந்தைய நிதிஆண்டை விட, இரு மடங்கு உயர்ந்து, 15,670 ஆக அதிகரித்துள்ளது.இதே காலத்தில், காப்புரிமை, வடிவமைப்பு, வணிக முத்திரை, புவிசார் குறியீடு ஆகியவற்றுக்கு உரிமை கோரி, இந்திய நிறுவனங்கள் அளித்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கையும், 2.03 லட்சத்தில் இருந்து, 2.68 லட்சமாக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 34.5 சதவீதம் உயர்ந்து, 2.83 லட்சமாக அதிகரித்துள்ளது.‘இது, அன்னிய நிறுவனங்களின் இந்திய முதலீடுகள் அதிகரித்து வருவதையும், உள்நாட்டு தொழில் துறை, மந்த நிலையில் இருந்து மீண்டு, எழுச்சிப் பாதைக்கு திரும்புவதையும் குறிப்பதாக உள்ளது’ என, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.அழகு சாதனங்கள், மருந்துகள், ஆய்வு மற்றும் மின் சாதனங்கள், எழுது பொருட்கள், ஆடைகள், குளிர்பானங்கள், விளம்பரங்கள், வர்த்தக நிர்வாகம் ஆகியவை தொடர்பாக, அதிக காப்புரிமை விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.அதே சமயம், மதிப்பீட்டு காலத்தில், புவிசார் குறியீடு உரிமம் கோரி வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 47லிருந்து, 17 ஆக குறைந்துள்ளது.இந்தியாவில், புவிசார் குறியீடு, 2003 செப்டம்பரில் அறிமுகமானது. ஒரு பகுதியில், பல ஆண்டுகளாக பாரம்பரியமாக தயாரிக்கப்பட்டு வரும் பொருள், உற்பத்தி செய்யப்படும் உணவு தானியங்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு, புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.இத்தகைய புவிசார் குறியீடு பெற்ற பொருளின் பெயரை, குறிப்பிட்ட பகுதியினர் தவிர, பிறர் பயன்படுத்த, சட்டத்தில் அனுமதியில்லை.இந்தியாவில், புகழ் பெற்ற பாசுமதி அரிசி, டார்ஜிலிங் தேயிலை, சந்தேரி துணி, மைசூரு சில்க், குலு துப்பட்டா, கங்ரா தேயிலை, தஞ்சாவூர் ஓவியங்கள், காஷ்மீர் வாதுமை மர கைவினைப் பொருட்கள், பருகாபாத் கை அச்சு சேலைகள், அலகாபாத் சுர்கா கொய்யா உள்ளிட்டவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.
தொழில் பாதுகாப்புஇந்தியாவில், உள்நாட்டு நிறுவனங்களை விட, அன்னிய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தான், அதிகளவில் வணிக முத்திரை காப்புரிமை பாதுகாப்பு கோருகின்றன.டி.சி.ஜேம்ஸ், தேசிய அறிவுசார் சொத்துரிமை அமைப்பு
விரைவுபடுத்த நடவடிக்கைகடந்த மார்ச், 1 நிலவரப்படி, 2,47,824 காப்புரிமை விண்ணப்பங்கள், பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன. காப்புரிமை விண்ணப்பங்களை, விரைவில் பைசல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காப்புரிமை விண்ணப்பங்களை ஆய்வு செய்ய, கூடுதலாக, 400 ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில், 396 பேர் பயிற்சி முடித்து, தற்போதுள்ள, 130 பேருடன் இணைந்து, ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.நிர்மலா சீதாராமன், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|