பதிவு செய்த நாள்
16 ஏப்2017
02:00
புதுடில்லி : ரிலையன்ஸ் பவர், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 215.90 கோடி ரூபாயை, ஒட்டு மொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 61.55 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய், 2,548.94 கோடி ரூபாயில் இருந்து, 2,696.50 கோடி ரூபாயாக அதிகரித்துஉள்ளது. ரிலையன்ஸ் பவர், கடந்த நிதியாண்டில், 4,200 கோடி யூனிட் மின்சாரத்தை விற்பனை செய்துள்ளது.இந்நிறுவனம், கடந்த நிதியாண்டில், 1,104.16 கோடி ரூபாயை, ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டில், 895.45 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய், 10,621.52 கோடி ரூபாயில் இருந்து, 10,891.68 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்துக்கு, ம.பி., மாநிலம், சாசனில், 3,960 மெகாவாட் திறனில், அனல் மின் நிலையம் உள்ளது. அதில், 86 சதவீத அளவுக்கு மின் உற்பத்தி நடப்பதாக, ரிலையன்ஸ் பவர் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|