பதிவு செய்த நாள்
16 ஏப்2017
02:00
டோக்கியோ : மத்திய அரசு, உள்நாட்டில் உற்பத்தித் துறையை ஊக்குவிக்க, ‘மேக் இன் இந்தியா’ என்ற திட்டத்தை துவக்கியுள்ளது. இதையடுத்து, வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் தொழில் துவங்க ஆர்வம் காட்டுகின்றன. அதன்படி, ஜப்பானைச் சேர்ந்த, சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம், தோஷிபா கார்ப்பரேஷன், டென்சோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, இந்தியாவில், லித்தியம் அயன் பேட்டரிகளை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, இந்நிறுவனங்கள், 1,200 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளன.இது குறித்து, சுசூகி நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியாவில் எலக்ட்ரிக் மோட்டார் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே, கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, லித்தியம் பேட்டரிகளை தயாரிக்க உள்ளோம். கூட்டு நிறுவனத்தில், சுசூகி, 50 சதவீத பங்குகளையும், தோஷிபா, 40; டென்சோ, 10 சதவீத பங்குகளையும் கொண்டிருக்கும். எங்கள் பேட்டரி, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், உற்பத்தி செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|