பதிவு செய்த நாள்
19 ஏப்2017
01:52
புதுடில்லி : மொபைல் போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள, சீனாவைச் சேர்ந்த, டிரான்ஸன் ஹோல்டிங்ஸ் நிறுவனம், ‘டெக்னோ’ எனும் பிராண்டின் கீழ், ‘ஸ்மார்ட் போன்’களை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆரிப் சவுத்ரி கூறியதாவது:நிறுவனம் செயல்பட்டு வரும், 58 நாடுகளில், இந்தியா மிக முக்கியமான சந்தையாக, எங்களுக்கு விளங்குகிறது. தற்போது, ‘டெக்னோ’ பிராண்டின் கீழ், ‘ஐ 3, ஐ 3 புரோ, ஐ 5 மற்றும் ஐ 5 புரோ’ என, நான்கு ஸ்மார்ட் போன்களை வெளியிட திட்டமிட்டு உள்ளோம். இவற்றின் விலை, 8,000 – 15 ஆயிரம் ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த தயாரிப்புகள் அனைத்தும், இந்தியாவிற்கென மிக பிரத்யேகமாக, நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டு உள்ளன. முதற்கட்டமாக, ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் இவை கிடைக்கும். இவை, உலகின் ஸ்மார்ட் போன் சந்தையில், கடும் போட்டியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|