பதிவு செய்த நாள்
27 ஏப்2017
00:41
ஐதராபாத் : ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனம், பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், கடந்த ஆண்டில், 2,380 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது இதையடுத்து, விற்பனையை அதிகரிக்க, ஐரோப்பிய நாட்டில், பால் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனத்துடன் கூட்டு சேர உள்ளது.
இதுகுறித்து, ஹெரிடேஜ் நிறுவன செயல் இயக்குனர் பிரஹ்மானி நாரா கூறியதாவது: எங்கள் நிறுவனம், தற்போது, தினமும், 14 லட்சம் லிட்டர் பாலை கையாண்டு வருகிறது. நாடு முழுவதும், கூடுதலாக, 150 கோடி ரூபாய் முதலீட்டில், ஐந்து இடங்களில், பால் பதப்படுத்தும் ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. தற்போது, 2,380 கோடி ரூபாயாக உள்ள வருவாயை, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 6,000 கோடி ரூபாயாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விரைவில், கூடுதலாக, 15 மாநிலங்களில், எங்கள் பால் பொருட்கள் விற்பனை செய்யப்படும். தற்போது, ஐரோப்பிய நாட்டில், பால் பொருட்கள் தயாரிப்பில் உள்ள நிறுவனத்துடன், ஹெரிடேஜ் கூட்டு சேர உள்ளது.இதன் மூலம், ‘யோகட்’ என்ற சிறப்பு வகை தயிர் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலில், அந்நிறுவனத்தின் ஆலோசனை பெறப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|