பதிவு செய்த நாள்
28 ஏப்2017
23:53
புதுடில்லி : ஆக்சிஸ் பேங்க், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 1,225.10 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 2,154.28 கோடி ரூபாயாக அதிகரித்து இருந்தது.
நிகர வாராக்கடன் அதிகரித்ததே, வங்கியின் நிகர லாபம் குறைந்ததற்கு முக்கிய காரணம். இதே காலாண்டுகளை ஒப்பிடும்போது, இவ்வங்கியின், மொத்த வருவாய், 13,592.97 கோடி ரூபாயில் இருந்து, 14,181.31 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல், வங்கியின் நிகர வாராக்கடன், 1.67 சதவீதத்தில் இருந்து, 5.04 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த முழு நிதியாண்டில், வங்கியின் நிகர லாபம், 3,679.28 கோடி ரூபாயில் இருந்து, 8,223.66 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், வங்கியின் மொத்த வருவாய், 50,359.50 கோடி ரூபாயில் இருந்து, 56,233.47 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|