பதிவு செய்த நாள்
02 மே2017
18:07
மும்பை : மூன்று நாள் விடுமுறைக்கு பிறகு துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் இன்று அதிகளவில் ஏற்ற - இறக்கமாக இருந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், உலோகம், ஆட்டோமொபைல், வங்கி மற்றும் ஐடி., உட்பட முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்ததால் இன்றைய வர்த்தகம் அதிக உயர்வுடன் ஆரம்பமாகின. குறிப்பாக சென்செக்ஸ் 134 புள்ளிகள் உயர்ந்து மீண்டும் 30 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகமானது. ஆனால் அதன்பின்னர் முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததாலும், அமெரிக்க பெடரல் வங்கியின் இரண்டு நாள் கூட்டம் நடப்பதால், அதன்மீதான எதிர்பார்ப்பாலும் பங்குச்சந்தைகள் சரிந்தன. இருப்பினும் சிறிய அளவு ஏற்றத்துடன் பங்குச்சந்தைகள் வர்த்தகத்தை நிறைவு செய்தன.வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2.78 புள்ளிகள் உயர்ந்து 29,921.18-ஆகவும், நிப்டி 9.75 புள்ளிகள் உயர்ந்து 9,313.80-ஆகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.இன்றைய வர்த்தகத்தில் 1518 நிறுவன பங்குகள் சரிந்தும், 1355 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 177 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|