பதிவு செய்த நாள்
05 மே2017
01:57
புதுடில்லி : நிக்கி – மார்க்கிட் நிறுவனம் இணைந்து, நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி தொடர்பாக வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:நாட்டின் சேவைகள் துறை, தொடர்ந்து மூன்றாவது மாதமாக, கடந்த ஏப்ரலில், சிறிது வளர்ச்சி கண்டு உள்ளது.கடந்த ஆண்டு நவம்பரில், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், சரிவைக் கண்டு வந்த சேவைகள் துறை, இந்தாண்டு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில், லேசான வளர்ச்சியில் பயணிக்கிறது.ஏப்ரலில், சேவைகள் துறை வளர்ச்சிக்கான, பி.எம்.ஐ., குறியீடு, 50.2 புள்ளிகள் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, மார்ச்சில், 51.2 புள்ளிகளாக இருந்தது. ஒரு துறையின் குறியீடு, 50 புள்ளிகளை தாண்டும்பட்சத்தில், அது வளர்ச்சியாக கருதப்படும்.புதிய தொழில்கள் உருவாவது மந்தமாக உள்ளது. அது போல, வேலைவாய்ப்பு வளர்ச்சியிலும், சுணக்க நிலை காணப்படுகிறது. சேவை துறையின் மந்தமான வளர்ச்சி, பண மதிப்பு நீக்கத்தின் தாக்கத்தில் இருந்து, இன்னும் முழுமையாக மீளவில்லை என்பதை காட்டுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|