பதிவு செய்த நாள்
06 மே2017
04:30
மும்பை,:வங்கிகள், 10 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட, குறைந்த விலை வீடுகளுக்கு கடன் வழங்க, மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன.வங்கியில் கடன் வாங்கி, திரும்பச் செலுத்தாமல் ஏய்க்கும் விஜய் மல்லையா போன்ற பெரும் பணக்காரர்களை விட, குறைந்த விலை வீடுகளுக்கு கடன் வாங்குவோர், நேர்மையாக, கடனை, வட்டியுடன் திரும்பச் செலுத்தி வருவது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
வாய்ப்பு
இது குறித்து, கடன் தகவல் நிறுவனமான, ‘சிபில்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:வங்கிகள், 2012 – 16 வரையிலான ஐந்து ஆண்டுகளில், 35 லட்சம் பேருக்கு, குறைந்த விலை வீடுகள் பிரிவில், கடன் வழங்கிஉள்ளன. இவ்வகை கடன் பிரிவில், வங்கிகள், ஆண்டுக்கு சராசரியாக, 23 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளன.அதே சமயம், இதே காலத்தில், கடனை திரும்பச் செலுத்த தவறியோர் அல்லது தாமதமாக செலுத்துவோரின் கடன் தொகை, 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.இதனால், குறைந்த விலை வீட்டுவசதிக் கான கடன்களை வழங்க, வங்கிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. வங்கிகளின் கடன் வளர்ச்சிக்கு, இப்பிரிவில் பிரமாதமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
வளர்ச்சி
மதிப்பீட்டு காலத்தில், குறைந்த விலை வீடுகள் பிரிவில், சராசரியாக, 4.10 லட்சம் ரூபாய் கடனாக பெறப்படுகிறது. இது, 2009 – 10ம் நிதியாண்டில், 4.80 லட்சம் ரூபாயாக இருந்தது.வீடுகள் விலை உயர்ந்து வருவதால், குறைந்த விலை வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இது, இப்பிரிவிற்கான வங்கிகளின் கடன் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. வரும் ஆண்டுகளில், ஏராளமான சிறிய வங்கிகள், நுண்கடன் நிறுவனங்கள் ஆகியவை, குறைந்த விலை வீட்டுக் கடன் பிரிவில் விறுவிறுப்பாக களமிறங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
‘டாப் – 5’ல் தமிழகம்கடந்த, 2012 – 16 வரையிலான ஐந்து ஆண்டுகளில், குறைந்த வருவாய் வீட்டு வசதி கடன் அளித்த வகையில், தமிழகம், மஹாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள், முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளன. இப்பிரிவில் துவக்கப்பட்ட புதிய கணக்குகளில், இந்த ஐந்து மாநிலங்களும், 60 சதவீத பங்களிப்பை கொண்டு உள்ளன.
யாருக்கு சலுகை?குறைந்த விலை வீட்டு திட்டத்தில் மத்திய அரசின் சலுகைகளை பெற, பொருளாதாரத்தில் பின்தங்கியோரின் ஆண்டு வருவாய், 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இது, நடுத்தர வருவாய் பிரிவினருக்கு, 3 – 6 லட்சம் ரூபாயாக உள்ளது. எனினும், இந்த வரம்பு, மாநில அரசுகளின் கொள்கையை பொறுத்துள்ளது. குறைந்த விலை வீடுகள் வாங்க, 6 லட்சம் ரூபாய் வரை பெறும் கடனுக்கு, வட்டி மானியம் வழங்கப்படுகிறது. கடன் தவணையை, 20 ஆண்டுகளில் திரும்பச் செலுத்தும் வசதி உள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|