பதிவு செய்த நாள்
11 மே2017
08:18
ஹோஷியார்பூர் : பஞ்சாபில், சோனாலிகா நிறுவனம் அமைத்துள்ள, புதிய டிராக்டர் ஆலையை, அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் துவக்கி வைத்தார்.
சோனாலிகா – ஐ.டி.எல்., நிறுவனம், டிராக்டர் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு – காஷ்மீர் ஆகிய மாநிலங்களில், முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. தற்போது, சோனாலிகா, பஞ்சாபில் உள்ள, ஹோஷியார்பூர் என்ற இடத்தில், 85 ஏக்கரில், டிராக்டர் உற்பத்தி செய்யும் ஆலையை அமைத்துள்ளது. அந்த ஆலை, 20 எச்.பி., – 120 எச்.பி., திறனில், ஆண்டுக்கு, மூன்று லட்சம் டிராக்டர்கள் தயாரிக்கும் திறன் உடையது. மொத்தம், 800 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆலையை, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் துவக்கி வைத்துள்ளார்.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் மிட்டல் கூறியதாவது: இந்தியாவில், டிராக்டர் சந்தையில், எங்கள் நிறுவனத்தின் பங்கு, 12 சதவீதம் என்றளவில் உள்ளது. சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையில், நவீன தொழில்நுட்பத்தில், டிராக்டர்கள் உற்பத்தி செய்யப்படும். ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் அடிப்படையில், இந்த ஆலை துவக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், உள்நாடு மற்றும் வெளி நாடுகளில், சோனாலிகாவின் விற்பனை அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|