பதிவு செய்த நாள்
11 மே2017
08:19
புதுடில்லி : ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம், முதன்முறையாக, பயணியருக்கு ரயில் டிக்கெட்டுகளை, வீடு தேடி வினியோகிக்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மற்றும் ‘மொபைல் ஆப்’பில், ‘பே ஆன் டெலிவரி’ எனும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இதன் மூலம், பயணியர் ஆன்லைனில் ரயில் டிக்கெட்டை பதிவு செய்த உடன், குறிப்பிட்ட கால இடைவெளிக்குள், அவர்களுடைய வீட்டுக்கே வந்து, ரயில் டிக்கெட் வினியோகம் செய்யப்படும். அப்போதே, அதற்குரிய கட்டணத்தை அவர்கள் செலுத்தலாம்.
பயணியர், ‘பே ஆன் டெலிவரி’ விருப்பத்தை, ‘ஆதார் அல்லது பான் கார்டு’ கொண்டு தேர்வு செய்யலாம். பதிவு செய்த டிக்கெட்டை, ‘டெலிவரி’க்கு முன், ரத்து செய்தாலோ அல்லது பெற்றுக் கொள்ள றுத்தாலோ, அதற்குரிய கட்டணங்களை செலுத்த வேண்டும். இந்த சேவை, 600க்கும் மேற்பட்ட நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பயண தேதிக்கு, ஐந்து நாட்கள் முன்னதாக, இந்த சேவையை பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|