பதிவு செய்த நாள்
11 மே2017
15:44
புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி கணக்கில் குறைந்தபட்சம் ரூ.5000 இருப்பு வைத்திருக்க வேண்டும் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது. ரூ.5000 க்கும் குறைவாக இருப்பு வைத்திருந்தால் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் கூறியது.
இந்த அதிர்ச்சியில் இருந்து வாடிக்கையாளர்கள் மீண்டு வருவதற்குள் அடுத்த அதிர்ச்சி உத்தரவை எஸ்பிஐ வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, எஸ்பிஐ.,யில் கணக்கு வைத்திருப்போர் எந்த வங்கியின் ஏடிஎம்.,ல் பணம் எடுத்தாலும் ஒவ்வொரு முறையும் ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறை ஜூன் 1 ம் தேதியிலிருந்து அமலுக்கு வர உள்ளது.
ஏடிஎம்.,ல் பணம் எடுக்க மட்டுமல்ல பழைய நோட்டுக்களை மாற்றவும், ரூ.5000 க்கு மேற்பட்ட அழுக்கடைந்த மற்றும் கிழிந்த நோட்டுக்களை மாற்றுவதற்கும் இந்த ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை நடைமுறையில் இருக்கும் 4 முறைக்கு மேல் ஏடிஎம்.,ல் பணம் எடுத்தால் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்ற முறையையும் எஸ்பிஐ ரத்து செய்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|