பதிவு செய்த நாள்
12 மே2017
06:23
கைத்தறி மற்றும் துணிநுால் துறை இயக்குனரகம், விசைத்தறி தொழிலுக்கு மானியத்தை அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, விசைத்தறி தொழிலை விரிவாக விளம்பரப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேவையான முயற்சிகளிலும் இயக்குனரகம் இறங்கி உள்ளது.
இது பற்றிய விபரம் வருமாறு: திருப்பூரை மையமாக வைத்து, விசைத்தறி தொழில் சிறப்பாக நடக்கிறது. இதை, அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விரிவாக விளம்பரப்படுத்தவும், ‘பவர்டெக் இந்தியா’ திட்டத்தில், நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக, ஒரு சிறிய அறையில், விசைத்தறி அமைப்பதற்கு, பொது பிரிவினருக்கு, 50 சதவீதம், எஸ்.சி.,க்கு, 70 சதவீதம், எஸ்.டி.,க்கு, 90 சதவீதம் மானியம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்சம், முதலீட்டிற்கு ஏற்ப, 10 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்பட உள்ளது.
ஏற்கனவே இருக்கும் விசைத்தறி கூடத்தை மேம்படுத்தல், குழுவாக பலர் சேர்ந்து, விசைத்தறி கூடம் அமைத்தல், விசைத்தறிகளுக்கான நுால் கிட்டங்கி அமைத்தல், விசைத்தறி மையத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் சப்ளை செய்யும், பொது வசதி மையம் அமைத்தல், பிரதமர் கடன் உதவித் திட்டம், விசைத்தறி கூடத்திற்கு சோலார் மின் வசதி செய்வது உள்ளிட்ட சேவைகளுக்கு, இந்த மானியம் வழங்கப்படுகிறது.இது குறித்து, தொழில் முனைவோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விரிவாக விளம்பரம் செய்யவும், மாவட்ட கலெக்டர்களுக்கு, கைத்தறி மற்றும் துணிநுால் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|