பதிவு செய்த நாள்
12 மே2017
06:23
மும்பை : உள்நாட்டில், பிஸ்கட் விற்பனையில், பார்லே நிறுவனம் முன்னணியில் உள்ளது. தற்போது, பிரீமிய பிஸ்கட் விற்பனை சந்தை மதிப்பு, 6,500 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. இது, ஆண்டுதோறும், 14 – 15 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்நிறுவனம், ‘பார்லே பிளாட்டினா’ என்ற தனி பிரிவை துவக்கிஉள்ளது. இதன் மூலம், பிரீமியம் வகை பிஸ்கட் விற்பனையில், 25 சதவீதம் வருவாய் ஈட்ட திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி மயாங்க் ஷா கூறியதாவது: எங்கள் நிறுவனம், ‘ஹைடு அண்டு சீக், மிலானோ, மெக்சிடோஸ்’ ஆகிய பிரீமியம் வகை, பிஸ்கட்களை விற்பனை செய்கிறது. இது, மற்ற பிஸ்கட் வகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. பார்லே பிளாட்டினா என்ற பிரிவின் மூலம், பிரீமிய வகை பிஸ்கட் விற்பனை அதிகரிக்கப்படும். தற்போது, பிரீமிய வகை பிஸ்கட் சந்தையில், பார்லேவின் பங்கு, 15 சதவீதம் என்றளவில் உள்ளது. இதை, அடுத்த இரு ஆண்டுகளில், 25 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|