பதிவு செய்த நாள்
13 மே2017
00:02
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, என்.டி.பி.சி., நிறுவனம், அதன் வர்த்தக நடவடிக்கைகளுக்காக, எம்.டி.என்., என்ற திட்டத்தின் கீழ், வெளிநாட்டில், ‘மசாலா பாண்டு’ எனும், ரூபாய் அடிப்படையிலான கடன் பத்திரங்களை வெளியிட்டு, நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
இதன்படி, முதற்கட்டமாக, 2016 ஆகஸ்டில், லண்டன் பங்குச் சந்தையில் மசாலா பாண்டுகளை வெளியிட்டு, 2,000 கோடி ரூபாய் திரட்டியது. இதையடுத்து, இம்மாத துவக்கத்தில், மீண்டும், மசாலா பாண்டுகளை வெளியிட்டு, 2,000 கோடி ரூபாய் திரட்டிக் கொண்டது. இந்த மசாலா பாண்டுகள், லண்டன் பங்குச் சந்தையில் புதிதாக துவக்கப்பட்டுள்ள, சர்வதேச கடன் பத்திர சந்தையில், நேற்று பட்டியலிடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மத்திய மின்சாரம் மற்றும் நிலக்கரி துறை அமைச்சர் பியுஷ் கோயல் பங்கேற்று, மசாலா பாண்டுகள் மீதான வர்த்தகத்தை துவக்கி வைத்தார். சர்வதேச முதலீட்டாளர்கள், இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய, ரூபாய் அடிப்படையிலான மசாலா பாண்டுகள் உதவுகின்றன. லண்டன், சர்வதேச கடன் பத்திர சந்தையில் முதன்முதலாக, என்.டி.பி.சி., மசாலா பாண்டு பட்டியலிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|