சொந்த வீடு வாங்க ஏற்ற நேரம் இதுவா?சொந்த வீடு வாங்க ஏற்ற நேரம் இதுவா? ... வைப்பு நிதிக்கு மாற்­றாக முத­லீட்டு வாய்ப்­புகள் வைப்பு நிதிக்கு மாற்­றாக முத­லீட்டு வாய்ப்­புகள் ...
நிதி இழப்­பு­களை ஈடு செய்­வது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2017
06:17

எல்லா நிதி முடி­வு­களும் சரி­யா­ன­தாக அமை­வ­தில்லை. சில முடி­வுகள் தவ­றாக அமைந்து இழப்பை ஏற்­ப­டுத்­தலாம். விலை ஏறும் என கணித்து வாங்­கிய நிறு­வன பங்­கு­களின் விலை சரி­யலாம். பணத்தை டிபாசிட் செய்த நம்­ப­க­மான நிறு­வனம், அதை திருப்­பித்­தர முடி­யாத சிக்­க­லுக்கு உள்­ளா­கலாம். இப்­படி பல கார­ணங்­க­ளினால் நிதி இழப்பு ஏற்­ப­டலாம். இந்த இழப்­பு­களில் இருந்து மீண்டு வரு­வது முக்­கியம்.

எங்கே தவறு? நிதி இழப்பை சந்­திக்கும் போது இரண்டு வித­மாக அதை எதிர்­கொள்­ளலாம். இழப்பு ஏமாற்­றத்­தையும், கோபத்­தையும் உண்­டாக்­கலாம். இது இயல்­பா­னது தான். ஒரு சிலர் ஏமாற்­றத்தை மூடி மறைக்க முயற்­சிக்­கலாம். இவை எதிர்­ம­றை­யா­னவை. ஆனால், தவறு நடந்­ததை ஒப்­புக்­கொண்டு அதற்­கான கார­ணங்­களை கண்­ட­றிந்து, சரி செய்யும் முயற்­சியை மேற்­கொள்­வதே நல்­ல­வி­த­மான எதிர்­வி­னை­யாக இருக்கும்.

அடுத்து என்ன? முத­லீட்டு மூலம் ஏற்­படும் இழப்பை எதிர்­கொள்ள சிறந்த வழி அதி­லி­ருந்து மீண்டு வரு­வதே. ஒரு இழப்பை இன்­னொரு முத­லீட்டின் பலன் மூலம் ஈடு செய்து விடலாம். அதற்கு முன் முத­லீட்டில் நடந்த தவறு என்ன என்­பதை அறிய வேண்டும். இதன் மூலம் எதிர்­கா­லத்தில் அதே போன்ற தவறை மீண்டும் செய்­யாமல் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கலாம்.

என்ன செய்ய வேண்டும்?தவ­றான முடி­வு­க­ளுக்­கான கார­ணங்­களை அறி­வ­தோடு, அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்றும் யோசித்துப் பார்க்க வேண்டும். சில நேரங்­களில் ஒருவர் தனது ரிஸ்க் தன்­மையை குறைத்து மதிப்­பிட்­டி­ருக்­கலாம்; அல்­லது முத­லீட்டின் பலனை தவ­றாக கணித்­தி­ருக்­கலாம். போது­மான தக­வல்கள் தெரி­யாமல் இருந்­தி­ருக்­கலாம். இவற்றை எல்லாம் சரி செய்ய வேண்டும்.
முன்­னெச்­ச­ரிக்கை!இவற்­றோடு, நிதி இழப்பை சமா­ளிக்கும் வகையில் ஏதேனும் ஏற்­பாடு செய்­தி­ருப்­பது இன்னும் நல்­லது. பங்கு முத­லீடு, ரியல் எஸ்டேட் உள்­ளிட்ட எந்த முத­லீட்­டிலும் தவறு செய்ய வாய்ப்­புள்­ளது. எனவே, அவ்­வாறு நிகழ்ந்தால் இழப்பு அதிகம் பாதிக்­காத வகையில் தற்­காப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருக்க வேண்டும். முத­லீட்டை பர­வ­லாக்­கு­வது, அவ­சர கால நிதியை உரு­வாக்­கு­வது போன்­றவை உதவும்.

உதவி கேளுங்கள் சுய ஆய்வு மூலம் சரி செய்­யக்­கூ­டிய தவ­றுகள் எனில் அதற்­கான செயல்­களில் பாதிக்­கப்­பட்­ட­வரே ஈடு­ப­டலாம். எனினும், சில நேரங்­களில் நிதி இழப்பின் பாதிப்பு தீவி­ர­மாக இருந்தால், சோர்வும், ஏமாற்­ற­முமே அதிகம் இருக்கும். இது போன்ற நேரங்­களில் கடன் ஆலோ­சனை போன்ற தொழில்­முறை தீர்­வு­களை நாட தயங்கக் கூடாது. பெரிய பிரச்­னை­க­ளுக்கும் ஏற்ற தீர்வு காணலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)