பதிவு செய்த நாள்
15 மே2017
06:17
எல்லா நிதி முடிவுகளும் சரியானதாக அமைவதில்லை. சில முடிவுகள் தவறாக அமைந்து இழப்பை ஏற்படுத்தலாம். விலை ஏறும் என கணித்து வாங்கிய நிறுவன பங்குகளின் விலை சரியலாம். பணத்தை டிபாசிட் செய்த நம்பகமான நிறுவனம், அதை திருப்பித்தர முடியாத சிக்கலுக்கு உள்ளாகலாம். இப்படி பல காரணங்களினால் நிதி இழப்பு ஏற்படலாம். இந்த இழப்புகளில் இருந்து மீண்டு வருவது முக்கியம்.
எங்கே தவறு? நிதி இழப்பை சந்திக்கும் போது இரண்டு விதமாக அதை எதிர்கொள்ளலாம். இழப்பு ஏமாற்றத்தையும், கோபத்தையும் உண்டாக்கலாம். இது இயல்பானது தான். ஒரு சிலர் ஏமாற்றத்தை மூடி மறைக்க முயற்சிக்கலாம். இவை எதிர்மறையானவை. ஆனால், தவறு நடந்ததை ஒப்புக்கொண்டு அதற்கான காரணங்களை கண்டறிந்து, சரி செய்யும் முயற்சியை மேற்கொள்வதே நல்லவிதமான எதிர்வினையாக இருக்கும்.
அடுத்து என்ன? முதலீட்டு மூலம் ஏற்படும் இழப்பை எதிர்கொள்ள சிறந்த வழி அதிலிருந்து மீண்டு வருவதே. ஒரு இழப்பை இன்னொரு முதலீட்டின் பலன் மூலம் ஈடு செய்து விடலாம். அதற்கு முன் முதலீட்டில் நடந்த தவறு என்ன என்பதை அறிய வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் அதே போன்ற தவறை மீண்டும் செய்யாமல் எச்சரிக்கையாக இருக்கலாம்.
என்ன செய்ய வேண்டும்?தவறான முடிவுகளுக்கான காரணங்களை அறிவதோடு, அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்றும் யோசித்துப் பார்க்க வேண்டும். சில நேரங்களில் ஒருவர் தனது ரிஸ்க் தன்மையை குறைத்து மதிப்பிட்டிருக்கலாம்; அல்லது முதலீட்டின் பலனை தவறாக கணித்திருக்கலாம். போதுமான தகவல்கள் தெரியாமல் இருந்திருக்கலாம். இவற்றை எல்லாம் சரி செய்ய வேண்டும்.
முன்னெச்சரிக்கை!இவற்றோடு, நிதி இழப்பை சமாளிக்கும் வகையில் ஏதேனும் ஏற்பாடு செய்திருப்பது இன்னும் நல்லது. பங்கு முதலீடு, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட எந்த முதலீட்டிலும் தவறு செய்ய வாய்ப்புள்ளது. எனவே, அவ்வாறு நிகழ்ந்தால் இழப்பு அதிகம் பாதிக்காத வகையில் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். முதலீட்டை பரவலாக்குவது, அவசர கால நிதியை உருவாக்குவது போன்றவை உதவும்.
உதவி கேளுங்கள் சுய ஆய்வு மூலம் சரி செய்யக்கூடிய தவறுகள் எனில் அதற்கான செயல்களில் பாதிக்கப்பட்டவரே ஈடுபடலாம். எனினும், சில நேரங்களில் நிதி இழப்பின் பாதிப்பு தீவிரமாக இருந்தால், சோர்வும், ஏமாற்றமுமே அதிகம் இருக்கும். இது போன்ற நேரங்களில் கடன் ஆலோசனை போன்ற தொழில்முறை தீர்வுகளை நாட தயங்கக் கூடாது. பெரிய பிரச்னைகளுக்கும் ஏற்ற தீர்வு காணலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|