பதிவு செய்த நாள்
17 மே2017
17:01
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று புதிய உச்சத்தை எட்டிய நிலையில் இன்று(மே 17-ம் தேதி) மேலும் ஒரு புதிய உச்சத்தை தொட்டன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு மற்றும் முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் பங்குச்சந்தைகள் சரிவுடன் இருந்தன. சென்செக்ஸ் 57.74 புள்ளிகளும், நிப்டி 22.55 புள்ளிகளும் சரிந்த நிலையில், அந்நிய முதலீடு அதிகரிப்பாலும், மழையளவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும் என்ற தகவலாலும் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன. இதனால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் முடிந்ததுடன், நேற்றைய புதிய உச்சத்தை முறியடித்து புதிய உச்சத்தை எட்டின. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 76.17 புள்ளிகள் உயர்ந்து 30,658.77-ஆகவும், நிப்டி 13.50 புள்ளிகள் உயர்ந்து 9,525.75-ஆகவும் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|