பதிவு செய்த நாள்
17 மே2017
21:26
புதுடில்லி : ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், ‘பேடிஎம்’ என்ற பிராண்டு பெயரில், ‘இ – வாலட்’ எனப்படும், மின்னணு பணப்பை சேவையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனம், ‘பேமென்ட் பேங்க்’ துவங்க, ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, ‘வரும் 23ம் தேதி முதல்,‘பேடிஎம் பேமென்ட் பேங்க்’ செயல்பட துவங்கும்,’ என, ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனர் விஜய் சேகர் சர்மா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: தற்போதுள்ள, பேடிஎம் வாடிக்கையாளர்கள் அனைவரும், பி.பி.பி.எல்., எனப்படும், பேடிஎம் பேமென்ட் பேங்க் வாடிக்கையாளர்களாக மாறுவர். அவ்வாறு மாற விரும்பாதோர், 23ம் தேதிக்குள், நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும். அத்துடன், அவர்கள் வங்கி கணக்கு விபரங்களையும் அளிக்க வேண்டும். அந்த வங்கி கணக்கிற்கு, பேடிஎம் கணக்கில் உள்ள பணம் மாற்றப்படும்.பேடிஎம் கணக்கில், கடந்த ஆறு மாதங்களாக எந்தவித பரிவர்த்தனையும் மேற்கொள்ளாதபட்சத்தில், வாடிக்கையாளர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, அக்கணக்கில் உள்ள தொகை, பேடிஎம் பேமென்ட் வங்கிக்கு மாற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|