பதிவு செய்த நாள்
23 மே2017
07:32
மும்பை : மத்தியில், பிரதமர் மோடி தலைமை யிலான அரசு அமைந்து, மூன்று ஆண்டுகள் முடிவடைந்து உள்ளது. இதே காலத்தில், பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களின் பங்குகள் மதிப்பு, 50 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து உள்ளது.
மத்திய அரசின் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள், தொழில் கொள்கைகள் போன்றவற்றால், பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில், மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீடு, 26 சதவீதம் வளர்ச்சி கண்டு, 6,000 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
சந்தை மதிப்புஇதே காலத்தில், ஒட்டுமொத்த பங்குச் சந்தையில், பங்குகளின் சந்தை மதிப்பு, 75 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 125 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. ஆக, பங்குகளின் சந்தை மதிப்பு, 50 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதில், டாடா, ரிலையன்ஸ், பிர்லா, பஜாஜ் போன்ற பெரிய குழுமங்களின் பங்குகள் மதிப்பு, குறைந்தபட்சம், தலா, 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அது போல, எச்.டி.எப்.சி., – ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, வேதாந்தா, எல் அண்டு டி, மகிந்திரா, ஹிந்துஜா, ஐ.டி.சி., – கோத்ரெஜ் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பும் அதிகரித்துள்ளது. பொதுத் துறை நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு, 22 சதவீதம் அதிகரித்து, 3.65 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.
அதிக லாபம்பங்கு மதிப்பு உயர்வால், அதிக லாபம் அடைந்தவர்களில், நிறுவனர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர். அடுத்த இடங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள், உள்நாட்டு நிதி நிறுவனங்கள் ஆகியவை உள்ளன. பங்குச் சந்தை முதலீடுகளில், சில்லரை முதலீட்டாளர்களின் பங்கு, 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. அதனால், பங்குகளின் சந்தை மதிப்பு உயர்வில், அவர்களின் பங்கு சிறிதளவே உள்ளது. நகர்ப்புறங்களில், 8 சதவீத குடும்பங்கள் தான், பங்குகளில் முதலீடு செய்கின்றன. இது, மியூச்சுவல் பண்டு திட்டங்களில், 10 சதவீதம் என்ற அளவிற்கு உள்ளது. கிராமப்புற குடும்பங்களில், பங்கு முதலீட்டாளர்களின் பங்கு, 1 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் அசத்தல்கடந்த, 2014 மே முதல், நடப்பாண்டு, மே, 19 வரை, எச்.டி.எப்.சி., குழுமத்தின் மூன்று நிறுவனங்களின் பங்கு மதிப்பு, 3 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 6.70 லட்சம் கோடி ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.டாடா குழுமத்தின் பங்கு மதிப்பு, 1.45 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்து, 8.55 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழும பங்குகளின் சந்தை மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்து, 4.50 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
குமார மங்களம் பிர்லாவின், ஆதித்ய பிர்லா குழுமத்தின் பங்கு மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, 3 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வேதாந்தா, எல் அண்டு டி, கோத்ரெஜ், மகிந்திரா ஆகியவற்றின் பங்கு மதிப்பு, முறையே, 75 ஆயிரம், 60 ஆயிரம், 50 ஆயிரம், 35 ஆயிரம் கோடி ரூபாய் என்றளவில் உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|