பதிவு செய்த நாள்
31 மே2017
04:55
புதுடில்லி : யூ கிளீன் நிறுவனம், விரிவாக்க திட்டப் பணிகளுக்காக, 32 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம், மும்பை, ஐ.ஐ.டி., பட்டதாரியான, அருணாப் சின்ஹா, யூ கிளீன் என்ற, நவீன சலவை தொழில் நிறுவனத்தை, 2016 அக்டோபரில் துவக்கினார். ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான, யூ கிளீன், தொழிற்நுட்பம், சந்தை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக, தற்போது, 32 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் நிறுவனர் அருணாப் சின்ஹா கூறியதாவது: நாட்டின் ஐந்து முன்னணி நகரங்களில், எங்கள் நிறுவனத்திற்கு, எட்டு கடைகள் உள்ளன. நாடு முழுவதும், 300 – 350 கடைகள் துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது. எதிர்கால திட்டங்களுக்காக, நடப்பாண்டில், 32 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட உள்ளது. அந்த நிதி, தொழிற்நுட்பம், பயிற்சி மற்றும் சந்தைப்படுத்தும் பணி ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|