டுவிட்டர் மூலம் ஜி.எஸ்.டி., விளக்கம் பெறும் வசதிடுவிட்டர் மூலம் ஜி.எஸ்.டி., விளக்கம் பெறும் வசதி ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.32 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.32 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
4 வகை முத­லீட்­டா­ளர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2017
07:44

உங்கள் முத­லீட்டு ஆளுமை என்ன என்­பது உங்­க­ளுக்­குத்­தெ­ரி­யுமா? முத­லீட்டு ஆளு­மையே ஒரு­வ­ரது நிதி முடி­வுகள் மீது தாக்கம் செலுத்­து­வதால், இதை அறிந்­தி­ருப்­பது அவ­சியம். முத­லீடு தொடர்­பான ரிஸ்க் தன்மை, அவை தரும் பலன்கள் போன்­றவை குறித்த நம்­பிக்கை அடிப்­ப­டையில் முத­லீடு செய்யும் தன்மை அமை­கி­றது. இதன் அடிப்­ப­டையில், தீவிர முத­லீட்­டா­ளர்கள், அமை­தி­யான முத­லீட்­டா­ளர்கள், தள்­ளிப்­போடும் முத­லீட்­டா­ளர்கள், அறி­யாமை கொண்ட முத­லீட்­டா­ளர்கள் என, முத­லீட்­டா­ளர்கள் நான்கு வகை­யாக பிரிக்­கப்­ப­டு­கின்­றனர்:

தீவிர முத­லீட்­டா­ளர்கள்:
* ரிஸ்க் அதிகம் என்­றாலும், பலனும் அதிகம் இருக்கும் என கரு­து­ப­வர்கள். எடுத்த எடுப்பில் முத­லீடு செய்­ப­வர்கள். அதிக பல­னுக்­கான கனவில் மிதக்கும் சூதா­டிகள்.
* மற்­ற­வர்கள் ரிஸ்கை பார்க்கும் இடத்தில் லாபத்தை காண்­பதால், பங்­கு­களில் அதிகம் முத­லீடு செய்­கின்­றனர். முத­லீட்டை பர­வ­லாக்­கு­வ­தில்லை.
* சில நேரங்­களில் அச­லுக்கு மோசம் வரலாம். எனவே யதார்த்­த­மான நிதி இலக்­குகள் தேவை. நீண்ட கால இலக்­கிற்கு பங்­குகள் மற்றும் குறு­கிய கால இலக்­கிற்கு கடன் சார் முத­லீ­டு­களை நாடலாம்.

அமை­தி­யான முத­லீட்­டா­ளர்கள் :
* பாது­காப்­பையே முக்­கி­ய­மாக கரு­து­ப­வர்கள். தவறு செய்­யக்­கூ­டாது என்­பதில் கவ­ன­மாக இருப்­ப­வர்கள். அநே­க­மாக ரிஸ்க் எடுக்க மாட்­டார்கள். சர்ச்­சை­யையும், பர­ப­ரப்­பையும் தவிர்ப்­ப­வர்கள்.
* பெரும்­பாலும் வைப்பு நிதி, பி.எப், காப்­பீடு போன்ற கடன் சார் முத­லி­டு­களை நாடு­ப­வர்கள். நிதி இலக்­கிற்கு ஏற்ப முத­லீ­டு­களின் பலனை ஆய்வு செய்­வ­தில்லை.
* இந்த வகை முத­லீட்டால், அதிகம் செல்வம் சேர்க்க முடி­யாது. பண­வீக்கம் பாதிப்பை ஏற்­ப­டுத்தும். நிதி ஆலோ­சனை பெற்று தகுந்த மாற்­றங்கள் செய்து கொள்ள வேண்டும்.

அறி­யாமை கொண்ட முத­லீட்­டா­ளர்கள் :
* நிதி விஷ­யத்தில் அதிக தக­வல்கள் இல்­லா­ததால், எப்­போ­துமே மற்­ற­வர்கள் சொல்­வதை கேட்டு முடி­வெ­டுப்­ப­வர்கள். தக­வல்­களை தெரிந்து கொள்­வதில் ஆர்வம் காட்­ட­மாட்­டார்கள்.
* இந்த வகை முத­லீட்­டா­ளர்கள் மற்­ற­வர்­களால் எளி­தாக ஏமாற்­றப்­படும் வாய்ப்பு இருக்­கி­றது. பெரும்­பாலும் மற்­ற­வர்கள் வழியை பின்­பற்றி முத­லீடு செய்­கின்­றனர்.
* இவர்கள், முதலில் நிதி விழிப்­பு­ணர்வு பெற வேண்டும். தொழில்­முறை நிதி ஆலோ­ச­னையை நாடலாம். மற்­ற­வர்கள் சொல்­வதை கேட்­காமல், நிதி இலக்கை மனதில் கொள்ள வேண்டும்.

தள்­ளிப்­போடும் முத­லீட்­டா­ளர்கள்:
* சோம்பல் மிக்­க­வர்கள். போதிய தக­வல்கள் கைவசம் இருந்­தாலும் அத­ன­டிப்­ப­டையில் முடிவு எடுக்­காமல், நல்ல வாய்ப்பை தவ­ற­விடும் பழக்கம் கொண்­ட­வர்கள்.
* போது­மான புரிதல் மற்றும் வங்­கிக்­க­ணக்கில் அதிக பணம் இருந்­தாலும், நல்ல வாய்ப்பை பயன்­ப­டுத்­திக்­கொள்­வ­தில்லை. சேமிப்பு கணக்கில் பணம் முடங்கி கிடக்கும்.
* செயல்­ப­டத்­ து­வங்­கு­வது தான் முதலில் செய்ய வேண்­டி­யது. ஏதா­வது ஓரி­டத்தில் இருந்து துவங்­கு­வது நல்­லது. உடன் செய்­வது இன்னும் நல்­லது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)