பதிவு செய்த நாள்
07 ஜூன்2017
04:09
பெங்களூரு : இந்திய, ஐ.டி., சேவைகள் துறையில், மூன்றாவது இடத்தில் விப்ரோ நிறுவனம் உள்ளது. இதன் நிறுவனர் அசீம் பிரேம்ஜி, பங்குகளை விற்றுவிட்டு, விப்ரோவில் இருந்து வெளியேற உள்ளதாக, சமீபத்தில் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இத்தகவலை வன்மையாக மறுத்துள்ள அசீம் பிரேம்ஜி, விப்ரோ ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.அதன் விபரம்:சாதாரண தாவர எண்ணெய் உற்பத்தியில் துவங்கி, இன்று சர்வதேச நிறுவனமாக விப்ரோ வளர்ந்துள்ளது. இந்நிறுவனத்தில், 73.25 சதவீத பங்குகள், எனக்கும், என் குடும்பத்திற்கும் உள்ளது. அவற்றை விற்பனை செய்துவிட்டு, விப்ரோவில் இருந்து நான் வெளியேறுவதாக, ஒரு வலைதளத்தில் செய்தி வந்துள்ளது. அதில், துளியும் உண்மையில்லை. உள்நோக்கத்துடன், அந்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக, விப்ரோ உடனான என் பயணம், இனியும் தொடரும். நிறுவனம், மேலும் வலிமையுடன் செயலாற்றும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|