பதிவு செய்த நாள்
07 ஜூன்2017
04:13
மும்பை : ‘இந்தியாவின், ஐ.டி., – பி.பி.எம்., துறைகளின் சந்தை மதிப்பு, 2025ல், 35 ஆயிரம் கோடி டாலராக உயரும்’ என, இந்திய சாப்ட்வேர் மற்றும் சேவைகள் கூட்டமைப்பான, ‘நாஸ்காம்’ மதிப்பீடு செய்துள்ளது.இந்த அமைப்பு, கடந்த வாரம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், பல்வேறு துறைகளைச் சார்ந்த நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்ற, சி.எக்ஸ்.ஓ., மாநாட்டை நடத்தியது. இந்தியாவிற்கு வெளியே, நாஸ்காம் முதன்முறையாக நடத்திய இந்த மாநாட்டில், ஐ.டி., எனப்படும், தகவல் தொழிற்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகளை வழங்கும் நிறுவனங்களும், அச்சேவைகளை பெறும் நிறுவனங்களும் பெருமளவில் பங்கேற்றன.இந்த மாநாட்டில், நாஸ்காம் தலைவர், ஆர்.சந்திரசேகர், திட்ட தலைவர் கணேஷ் நடராஜன், செயற்குழு உறுப்பினரும், டபிள்யு.என்.எஸ்., குளோபல் சர்வீசஸ் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியுமான, முருகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மாநாடு குறித்து, முருகேஷ் கூறியதாவது:தொலைத் தொடர்பு, வங்கி, ஆரோக்கிய பராமரிப்பு, தொழிற்நுட்ப தீர்வுகள், நுகர்வோர் சாதனங்கள் உட்பட, பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும், பிரபல கல்வியாளர்களும், மாநாட்டில் பங்கேற்று பேசினர். அவர்கள், தாங்கள் சார்ந்த துறைகளின் முன்னேற்றத்திற்கு, ஐ.டி., மற்றும் நிறுவன செயல்பாடுகளை மேம்படுத்தும், பி.பி.எம்., துறைகள் எந்த அளவிற்கு பங்களிப்பை வழங்கியுள்ளன என்பதையும், எதிர்காலத்தில், அத்துறைகளுக்கு உள்ள முக்கியத்துவத்தையும் விரிவாக எடுத்துரைத்தனர்.அவர்கள் ஆற்றிய உரை, ஐ.டி., துறையின் எதிர்காலம் குறித்த, அனைத்து தவறான ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, வளர்ச்சியை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. அதன் அடிப்படையிலும், பல்வேறு காரணிகளை கொண்டும், இந்திய, ஐ.டி., மற்றும் பி.பி.எம்., துறைகளின் வளர்ச்சி கணிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தற்போது, 15,300 கோடி டாலராக உள்ள இத்துறைகளின் சந்தை மதிப்பு, 2025ல், 35 ஆயிரம் கோடி டாலராக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.மாநாட்டில் பங்கேற்ற, வணிக நிறுவனங்களின் தலைவர்கள், ‘பெருகி வரும் மின்னணு தொழிற்நுட்ப பயன்பாடு, தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் நாடுகளுக்கு அப்பாற்பட்டு ஏற்படுத்தியுள்ள தாக்கம், பிரமிக்க வைக்கிறது’ என, தெரிவித்தனர்.வர்த்தக நடைமுறைகளில், டிஜிட்டல் தொழிற்நுட்பங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை மறுக்க முடியாது. அவை, நம் வாழ்க்கை மற்றும் பணிப் பாணிகளை மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வெற்றிகரமான டிஜிட்டல் சமூகத்தை உருவாக்க, ஒன்றுபட்ட கூட்டு முயற்சி அவசியம் என, மாநாட்டில் பங்கேற்றோர் வலியுறுத்தினர்.இவ்வாறு அவர் கூறினார்.
வேலைவாய்ப்புகடந்த ஓராண்டில், இந்திய, ஐ.டி., மற்றும் பி.பி.எம்., எனப்படும், நிறுவன செயல்பாடுகளை மேம்படுத்தும் துறைகளில், 1.70 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன. இத்துறைகள், மூன்று ஆண்டுகளில், மொத்தம், 6 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன.– முருகேஷ் செயற்குழு உறுப்பினர், ‘நாஸ்காம்’
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|