பதிவு செய்த நாள்
08 ஜூன்2017
05:25
ஐதராபாத்: டெய்ம்லர் நிறுவனம், சென்னையில் உள்ள வர்த்தக வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளது.
டெய்ம்லர் இந்தியாவுக்கு, சென்னையை அடுத்த ஒரகடத்தில், தொழிற்சாலை உள்ளது. அங்கு, இந்நிறுவனம், ‘பாரத் பென்ஸ், பியூசோ, மெர்சிடஸ் பென்ஸ்’ ஆகிய பிராண்டுகளில், டிரக், பஸ் மற்றும் இன்ஜின்களை உற்பத்தி செய்கிறது. இந்த ஆலை, ஆண்டுக்கு, 72 ஆயிரம் வாகனங்களை தயாரிக்கும் திறன் உடையது. இந்நிலையில், ஒரகடம் ஆலையை விரிவுபடுத்த, டெய்ம்லர் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நெசில்ஹாப் கூறியதாவது: சென்னை தொழிற்சாலையில், கூடுதலாக ஒரு உற்பத்தி பிரிவு துவங்கப்பட உள்ளது. அங்கு, 6.5 டன் முதல், 8.6 டன் எடையிலான வர்த்தக வாகனங்கள் தயாரிக்கப்படும். முதற்கட்டமாக, புதிய உற்பத்தி பிரிவில் தயாராகும் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படும். தற்போது, எங்கள் நிறுவனம், 30 நாடுகளுக்கு, வாகனங்களை ஏற்றுமதி செய்கிறது. நடப்பாண்டில், கூடுதலாக, 10 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|