பதிவு செய்த நாள்
09 ஜூன்2017
07:35
புதுடில்லி: ஜப்பானைச் சேர்ந்த, நிக்கான் நிறுவனம், நவீன வகை கேமரா தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்துக்கு, அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, சீனா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் முக்கிய சந்தைகளாக உள்ளன. தற்போது, இந்நிறுவனம், இந்தியாவில் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, நிக்கான் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் காஸ்யூ நினோமியா கூறியதாவது: கடந்த நிதியாண்டில், நிக்கான் இந்தியா நிறுவனத்தின் விற்பனை, 1,150 கோடி ரூபாயாக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டில், 1,200 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. நிக்கான் நிறுவனத்தின் சர்வதேச விற்பனையில், இந்தியாவின் பங்கு, 3 – 4 சதவீதம் என்றளவில் உள்ளது.
டி.எஸ்.எல்.ஆர்., கேமரா சந்தையில், எங்கள் நிறுவனத்தின் பங்கு, 55 சதவீதமாக உள்ளது. இந்திய சந்தையில், புதிய வகை கேமராக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதன் மூலம், சர்வதேச சந்தையில், முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக, நிக்கான் இந்தியா திகழும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|