பதிவு செய்த நாள்
10 ஜூன்2017
06:44
கோல்கட்டா : பெப்சிகோ நிறுவனம், ‘டோரிடோஸ்’ பிராண்டு சிப்ஸ் வகையை, இந்தியாவிலேயே தயாரித்து அறிமுகப்படுத்தி உள்ளது.
சர்வதேச அளவில், குளிர்பானம் மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்பனையில், பெப்சிகோ முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், ‘டோரிடோஸ்’ என்ற பெயரில், சிறப்பு வகை நொறுக்குத் தீனிகளை, பல்வேறு நாடுகளில் விற்பனை செய்கிறது. அவற்றை, தற்போது, கோல்கட்டாவில் உள்ள ஆலையில் தயாரிக்க துவங்கி உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியாவில், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ் வகைகளுக்கு, அதிக தேவை உள்ளது. எங்கள் நிறுவனத்துக்கு, மேற்கு வங்க மாநிலம், சாய்கயில் என்ற இடத்தில், துலாகர் உணவு பூங்காவில் தொழிற்சாலை உள்ளது. தற்போது, அங்கு, ‘குர்குரே’ சிப்ஸ் தயாரிக்கப்படுகிறது.
மத்திய அரசு, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது. இதனால், துலாகரில், டோரிடோஸ் பிராண்டு உணவுப் பொருட்களை தயாரிக்க துவங்கி இருக்கிறோம். முதற்கட்டமாக, இந்தியாவில் உள்ள, 40 நகரங்களில், டோரிடோஸ் நாச்சோஸ் சிப்ஸ் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|