பதிவு செய்த நாள்
10 ஜூன்2017
06:47
புதுடில்லி : சாம்சங் நிறுவனம், ‘ஸ்மார்ட்’ போன், குளிர்பதன பெட்டி தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, 4,915 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
சாம்சங் நிறுவனம், டில்லிக்கு அருகில் உள்ள, நொய்டாவில், 1996ல், தொழிற்சாலையை அமைத்தது. அங்கு, டிவி, மொபைல் போன், குளிர்பதன பெட்டி உள்ளிட்ட மின் சாதனங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில், நொய்டா ஆலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து, சாம்சங் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நொய்டா தொழிற்சாலையில், மாதத்துக்கு, 50 லட்சம் மொபைல் போன்கள்; 15 லட்சம் குளிர்பதன பெட்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது, நொய்டா ஆலை, 4,915 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம், மொபைல் போன் உற்பத்தித் திறன், ஆண்டுக்கு, 1.20 கோடியாகவும்; குளிர்பதன பெட்டி, 30 லட்சமாகவும்; ‘டிவி’ பானல்கள், 26 லட்சமாகவும் அதிகரிக்கப்பட உள்ளன. இந்த விரிவாக்கத்தால், 15 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|