பதிவு செய்த நாள்
12 ஜூன்2017
04:17
உடல் ஆரோக்கியம் போலவே, நிதி ஆரோக்கியமும் நல்ல பழக்க வழக்கங்கள் சார்ந்தது என்று கூறும், லாராஷின், பணம் தொடர்பான மூன்று கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் இது சாத்தியமாகும் என, தனது, ‘தி மில்லினியல் கேம்பிளான்’ மின்னுாலில் விவரிக்கிறார்:
நிதி ஆரோக்கியம் காப்பதற்கான முதல் வழி, வருமானத்தை விட குறைவாக செலவு செய்வதாகும். இதுவே பணக்காரர்களை உருவாக்குகிறது. இதன் மூலமே செல்வந்தவர்களாக இல்லாதவர்களும், கை நிறைய பணம் இல்லாத சூழலிலும் நிதி இலக்குகளை அடைய உதவுகிறது. வருமானத்தை விட குறைவாக செலவு செய்யும் போது, சேமிக்க முடிகிறது; சேமிப்பே செல்வமாகிறது.இந்த கொள்கையே பலரையும் பணக்கவலை இல்லாமல் செய்கிறது. ஏனெனில், அவர்களிடம் செலவுக்கு பணம் இருக்கும் என்பதோடு, எதிர்பாராத செலவுகள் வந்தால்,சமாளிக்க சேமிப்பு இருக்கும். நீங்கள் பணக்காரரோ ஏழையோ, உங்கள் இலக்கை நோக்கி முன்னேறும் சுதந்திரம் பெற இதுவே வழி. பணக்காரர்கள் வரவுக்கு மீறி செலவு செய்தால் செல்வத்தை இழப்பர். ஏழைகள் வரவுக்கு மீறி செலவு செய்தால், வறுமையில் இருந்து வெளியேற முடியாமல் தவிப்பர்.
இரண்டாவது கொள்கை, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக முதலீடு செய்யத் துவங்குவதாகும். ஓய்வு காலத்திற்கு தேவையான தொகையை சேமிப்பது தான் மிகவும் சவாலானது. வாழ்நாளில், இதற்காக தான் அதிகம் சேமிக்க வேண்டும். நீண்ட காலத்திற்கு சீராக சேமிப்பதன் மூலமே இதை சாதிக்க முடியும். ஆனால், இளம் வயதிலேயே சேமிக்கத் துவங்கிவிட்டால், இது ஓரளவு எளிதானதாக மாறிவிடும். ஏனெனில், இளம் வயதில் சேமிக்கத் துவங்குவது கூட்டு வட்டியின் பலனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வழி செய்கிறது.ஓய்வு காலத்திற்கு சேமிக்கத் துவங்குவதற்கு ஏற்ற காலம் என்று ஒன்று இல்லை. எப்போதுமே அதைவிட முக்கியமான விஷயங்கள் இருக்கலாம்.
எப்போதும் ஒரு காரணம் இருந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையின் மற்ற தேவைகளுக்கு மத்தியில் தான், இதற்கு பணம் ஒதுக்க வேண்டும். ஓய்வு காலத்திற்கு சேமிப்பதை எளிதாக்க சிறந்த வழி, மிகவும் இளம் வயதிலேயே சேமித்து முதலீடு செய்யத் துவங்குவது தான். அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பது மூன்றாவது கொள்கையாகும். அதிகம் சம்பாதிப்பது பல பிரச்னைகளை தீர்ப்பதாக கருதப்படுகிறது. மேலும், சம்பாதிப்பது கூடுதலான கூட்டுப்பலன்களை அளிப்பதாகும்.
இளம் வயதில் அதிகம் சம்பாதிக்கத் துவங்கினால், எதிர்காலத்தில் கிடைக்க கூடிய ஊதிய உயர்வு இன்னும் அதிகமாக இருக்கும். கூடுதலாக வரும் பணத்தை கொண்டு, விடுமுறைக்கு திட்டமிடலாம் அல்லது வீடு வாங்க முன்பணம் சேர்க்கலாம். என்னைப் பொறுத்தவரை, முழுநேர வேலையில் இருந்த போதே பகுதி நேர வேலை மூலம், கூடுதலாக சம்பாதிக்கத் துவங்கியது சரியான நிதிப்பாதையில் பயணிக்க உதவியது. இதனால் என்னால் கடன்களை அடைக்க முடிந்ததோடு, சேமிக்கவும் முடிந்தது. என் நிதி வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு, இந்த மூன்று கொள்கைகளே முக்கிய காரணம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|