பதிவு செய்த நாள்
17 ஜூன்2017
00:13
புதுடில்லி : போஷ் நிறுவனம், மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், நடப்பாண்டில், 900 கோடி ரூபாயை, மூலதன செலவுகளுக்காக முதலீடு செய்ய உள்ளது.
இது குறித்து, போஷ் குழுமத்தின் இந்திய தலைவர் சவுமித்ர பட்டாச்சார்யா கூறியதாவது: இது, கருவிகளின் இணையத்துக்கான காலமாகும். இப்பிரிவில், இந்திய சந்தைக்கு ஏற்ற தீர்வுகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம். சமீபத்தில், உள்நாட்டிலேயே தயார் செய்யப்பட்ட, நுண் கால நிலை கண்காணிப்பு கருவியை அறிமுகம் செய்துள்ளோம். இதன் மூலம், சுற்றுச்சூழல் மாசு அளவுகள் குறித்து, முக்கியமான தகவல்களை பெற முடியும். மேலும், வேளாண், வாகனம், சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில், கருவிகளின் இணையத்தின் அடிப்படையிலான தீர்வுகளையும் வழங்கி வருகிறோம்.
மேலும், வருங்காலத்துக்கு தேவையான தொழிற்நுட்பங்களை மேம்படுத்த உள்ளோம். இதற்காக, நடப்பு நிதியாண்டில், 900 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. அதில், 15 சதவீத தொகை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு செலவிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|