ஜி.எஸ்.டி., பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு ஜி.எஸ்.டி., பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு ... மூல­தன செல­வுக்­காக ரூ.900 கோடி; போஷ் நிறு­வ­னம் நடப்­பாண்­டில் முத­லீடு மூல­தன செல­வுக்­காக ரூ.900 கோடி; போஷ் நிறு­வ­னம் நடப்­பாண்­டில் முத­லீடு ...
மசாலா பொருட்­கள் ஏற்­று­ம­தி­யில் மிள­காய் வற்­றல் தொடர்ந்து முத­லி­டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2017
23:53

கொச்சி : இந்­தியா, கடந்த நிதி­யாண்­டில், 17,664.61 கோடி ரூபாய் மதிப்­புள்ள, 9,47,790 டன் மசாலா மற்­றும் மசாலா பொருட்­களை ஏற்­று­மதி செய்து, புதிய சாதனை படைத்­துள்­ளது.

இது குறித்து, வாரி­யம் வெளி­யிட்­டு உள்ள அறிக்கை விப­ரம்: கடந்த, 2016 – 17ம் நிதி­யாண்­டில், மிள­காய் வற்­றல், இல­வங்­கம், ஏலக்­காய், மிளகு உள்­ளிட்ட மசாலா வகை­கள் மற்­றும் அது சார்ந்த பொருட்­கள் ஏற்­று­மதி, அள­வின் அடிப்­ப­டை­யில், 12 சத­வீ­தம் அதி­க­ரித்து, 9,47,790 டன்­னாக உயர்ந்­துள்­ளது. ரூபாய் மதிப்­பில், 9 சத­வீ­தம் உயர்ந்து, 17,664.61 கோடி­யாக அதி­க­ரித்­துள்­ளது.

சீரகம்:
முந்­தைய, 2015 – 16ம் நிதி­யாண்­டில், 16,238.23 கோடி ரூபாய் மதிப்­பி­லான, 8,43,255 டன் மசாலா வகை­கள் மற்­றும் அது சார்ந்த பொருட்­கள் ஏற்­று­மதி செய்­யப்­பட்­டன. மசாலா வகை­கள் ஏற்­று­ம­தி­யில், மிள­காய் வற்­றல், தொடர்ந்து முத­லி­டத்­தில் உள்­ளது. அடுத்த இடத்­தில், சீர­கம் உள்­ளது.கடந்த நிதி­யாண்­டில், 5,070.75 கோடி ரூபாய் மதிப்­பி­லான, 4,00,250 டன் மிள­காய் வற்­றல் ஏற்­று­மதி செய்­யப்­பட்டு உள்­ளது. இது, முந்­தைய நிதி­யாண்­டில் ஏற்­று­மதி செய்­யப்­பட்­டதை விட, மதிப்பு மற்­றும் அளவு அடிப்­ப­டை­யில், முறையே, 27 மற்­றும் 15 சத­வீ­தம் உயர்­வா­கும்.

இதே காலத்­தில், 1,963.20 கோடி ரூபாய் மதிப்­புள்ள, 1,19,000 டன் சீர­கம் ஏற்­று­ம­தி­யாகி, மதிப்பு மற்­றும் அளவு அடிப்­ப­டை­யில், முறையே, 28 மற்­றும் 22 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது. சீர­கம் இறக்­கு­மதி செய்­யும் நாடு­கள், தரக் கட்­டுப்­பாடு குறித்து எச்­ச­ரிக்கை விடுத்­ததை அடுத்து, வாரி­யம் கட்­டாய தரச் சோதனை நடை­மு­றையை அமல்­ப­டுத்­தி­யது. இத­னால், சீர­கம் ஏற்­று­மதி அதி­க­ரித்­துள்­ளது.

மஞ்சள்:
மருந்து தயா­ரிப்­பில் மஞ்­சள் அதி­கம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தால், சர்­வ­தேச சந்­தை­யில் அதற்­கான தேவை பெருகி வரு­கிறது. கடந்த நிதி­யாண்­டில், 1,241 கோடி ரூபாய் மதிப்­புள்ள, 1,16,500 டன் மஞ்­சள் ஏற்­று­மதி செய்­யப்­பட்டு உள்­ளது. பெருஞ்சீரகம் ஏற்­று­மதி, அளவு மற்­றும் மதிப்­பின் அடிப்­ப­டை­யில், முறையே, 129 மற்­றும் 79 சத­வீ­தம் உயர்ந்­துள்­ளது. இதே போல, வெள்­ளைப் பூண்டு ஏற்­று­மதி, முறையே, 39 மற்­றும் 92 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது.

ஜாதிக்­காய் மற்­றும் ஜாதிப்­பத்­திரி ஏற்­று­மதி, 25 சத­வீ­தம் உயர்ந்து, 4,050 டன்­னில் இருந்து, 5,070 டன்­னாக வளர்ச்சி கண்­டுள்­ளது. இதே காலத்­தில், சிவ­ரிக் கீரை ஏற்­று­மதி, 5,310 டன்­னில் இருந்து, 6,250 டன்­னாக உயர்ந்­துள்­ளது. கடு­மை­யான உணவு பாது­காப்பு விதி­மு­றை­கள் தான், சர்­வ­தேச விளை­பொ­ருட்­கள் வர்த்­த­கத்தை தீர்­மா­னிக்­கின்றன. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

சிறந்த மண் வளம்:
வட­கி­ழக்கு பிராந்­தி­யத்­தில், ஏலக்­காய் விளைச்­ச­லுக்கு ஏற்ற சிறந்த மண் வளம் உள்­ளது. அத­னால், அந்த­பி­ராந்­தி­யத்­தில் ஏலக்­காய் உற்­பத்­தியை அதி­க­ரிக்க நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டன. இதன் விளை­வாக, ஏலக்­காய் ஏற்­று­மதி, அளவு மற்­றும் மதிப்­பின் அடிப்­ப­டை­யில், முறையே, 30 மற்­றும் 9 சத­வீ­தம் உயர்ந்­துள்­ளது.
-ஏ.ஜெய­தி­லக், தலை­வர், இந்­திய மசாலா பொருட்­கள் வாரி­யம்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)