பதிவு செய்த நாள்
18 ஜூன்2017
05:21
திருவனந்தபுரம் : குஜராத்தில் நடக்க உள்ள, ‘டெக்ஸ்டைல்ஸ் இந்தியா’ கண்காட்சியில், 60 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.இது குறித்து, மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் அஜய் தாம்தா கூறியதாவது:இந்தியாவில், ஜவுளித் துறையை ஊக்குவிக்க, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, குஜராத்தில் உள்ள காந்தி நகரில், ஜூன் 30 – ஜூலை 2 வரை, டெக்ஸ்டைல்ஸ் இந்தியா என்ற பெயரில், சர்வதேச ஜவுளி கண்காட்சி நடக்க உள்ளது. இதை, அசாம், ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இணைந்து நடத்த உள்ளன.கண்காட்சியில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட, 60 நாடுகளைச் சேர்ந்த, 2,500க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்க உள்ளனர். பல மாநில ஜவுளித் துறையினரும் பங்கேற்பர்.இதன் மூலம், இந்தியாவில் இருந்து, ஜவுளி மற்றும் கைவினை பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்கும். சர்வதேச நிறுவனங்கள், இந்தியாவில், ஜவுளி தொழிலில் அதிகளவில் முதலீடு செய்யவும் வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|