பதிவு செய்த நாள்
20 ஜூன்2017
23:44
புதுடில்லி : ‘‘ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் வழங்க, 2,000 கோடி ரூபாயை, மத்திய அமைச்சரவை ஒதுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது,’’ என்று, மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலர் ரமேஷ் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் கூறியதாவது: புதிதாக தொழில் துவங்குவோரை ஊக்குவிக்க, மத்திய அரசு, ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டத்தை, 2016ல் துவக்கியது. அந்நிறுவனங்களுக்கு, விரைவான அனுமதி, உத்தரவாதம் இல்லாமல் எளிதில் கடன் வசதி உள்ளிட்ட சலுகைகளை, அரசு வழங்கி வருகிறது. இதுவரை, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, 960 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளது.
அடுத்து ஒரு நிறுவனத்துக்கு, அதிகபட்சமாக, ஐந்து கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு, மத்திய அமைச்சரவை, அடுத்த மாத இறுதிக்குள் அனுமதி வழங்கும் என, தெரிகிறது. மேலும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, வங்கி உத்தரவாதம் இல்லாமல் கடன் வழங்க, 2,000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து, மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, மத்திய நிதி அமைச்சகம், கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. அந்த நிதி, அடுத்த மூன்று ஆண்டுகளில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை துவக்குவோருக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|