செயற்கை நுாலிழைக்கு ஜி.எஸ்.டி.,யை குறைக்க ஜவுளி துறை கோரிக்கைசெயற்கை நுாலிழைக்கு ஜி.எஸ்.டி.,யை குறைக்க ஜவுளி துறை கோரிக்கை ... ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு ...
எஸ்.எம்.இ., பிரிவில் பங்குகள் வெளியிட நிறுவனங்கள் ஆர்வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2017
23:43

மும்பை : மும்பை பங்­குச் சந்தை, சிறிய மற்­றும் நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு என, 2012 மார்ச்­சில், எஸ்.எம்.இ., என்ற பங்­குச் சந்தை பிரிவை அறி­முகப்­ப­டுத்­தி­யது.

அது முதல், 214 நிறு­வ­னங்­கள், இப்­பி­ரி­வில் புதிய பங்கு வெளி­யீட்­டிற்­காக விண்­ணப்­பித்து உள்­ளன. அவற்­றில், 183 நிறு­வ­னங்­கள், பங்கு வெளி­யீடு மேற்­கொண்டு, 1,440 கோடி ரூபாய் திரட்­டிக் கொண்­டன. இந்­நி­று­வ­னங்­க­ளின் தற்­போ­தைய சந்தை மூல­த­னம், 18,832 கோடி ரூபா­யாக உள்­ளது. எஸ்.எம்.இ., பிரி­வில் பட்­டி­ய­லி­டப்­பட்ட நிறு­வ­னங்­களில், 23 நிறு­வ­னங்­கள், மும்பை பங்­குச் சந்­தைக்கு மாறி உள்­ளன. விரை­வில், 23 நிறு­வ­னங்­கள், பங்கு வெளி­யீட்­டில் இறங்க உள்­ளன.

இது குறித்து, மும்பை பங்­குச் சந்தை வெளி­யிட்­டுள்ள அறிக்கை: ஆசி­யா­வின் பழ­மை­யான மும்பை பங்­குச் சந்தை, இந்­தி­யா­வில் முதன்­மு­த­லாக, சிறிய மற்­றும் நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு என, எஸ்.எம்.இ., சந்­தையை, ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன் துவக்­கி­யது. இதில், குறைந்த மூல­த­னம் கொண்ட, சிறிய மற்­றும் நடுத்­தர நிறு­வ­னங்­கள், புதிய பங்­கு­களை வெளி­யிட்டு, கணி­ச­மான வளர்ச்­சியை கண்­டுள்­ளன. சில ஆண்­டு­க­ளாக, சிறிய மற்­றும் நடுத்­தர நிறு­வ­னங்­கள் துறை, இந்­திய பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பை வழங்கி வரு­கிறது.

பெரிய நிறு­வ­னங்­களை விட, குறைந்த செல­வில், ஏரா­ள­மான வேலை­வாய்ப்­பு­களை அளிப்­ப­து­டன், கிரா­மப்­பு­றங்­கள் தொழில்­ம­ய­மா­க­வும், பொரு­ளா­தா­ரத்­தில் மேம்­பாடு காண­வும் துணை புரி­கிறது. சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள், வளர்ச்­சிக்­கும், விரி­வாக்க திட்­டங்­க­ளுக்­கும் தேவை­யான நிதியை, சுல­ப­மாக திரட்ட, எஸ்.எம்.இ., சந்தை குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பை வழங்கி வரு­கிறது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)