பதிவு செய்த நாள்
21 ஜூன்2017
23:50
புதுடில்லி : ‘உள்கட்டமைப்பு துறையில், சாலை, ரயில்வே போன்ற போக்குவரத்து சார்ந்த திட்டங்களுக்கு, ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்களிக்க வேண்டும்’ என, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பான – ‘அசோசெம்’ வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக, அசோசெம், மத்திய நிதியமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதம்: சாலை மற்றும் ரயில் துறைகளில், போக்குவரத்துக்கான உள்கட்டமைப்பு திட்டங்கள் முடிய நீண்ட காலம் ஆகும். மேலும், இத்திட்டங்களில் வருவாயும் குறைவாகவே உள்ளது. அதனால், சாலை மற்றும் ரயில்வே துறைகளில், போக்குவரத்து சார்ந்த பணிகளுக்கான வரிச்சலுகை, ஜி.எஸ்.டி.,யிலும் தொடர வேண்டும். இப்பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், நேரடியாக கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி.,யில், உள்ளீட்டு வரி விதிமுறையில் இருந்து விலக்களிக்க வேண்டும். இதனால், அவர்களின் நடைமுறை மூலதனம் முடங்குவது தடுக்கப்படும்.
தற்போது, நெடுஞ்சாலைகளில், பயணியரிடம் வசூலிக்கும் சுங்கக் கட்டணத்திற்கு, சேவை வரி கிடையாது. அது போல, சாலை பணிகள் மற்றும் நெடுஞ்சாலை பராமரிப்பிற்காக, ஒப்பந்ததாரர்களுடன், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பகிர்ந்து கொள்ளும் குறிப்பிட்ட வருவாய்க்கும் சேவை வரி இல்லை. ஜி.எஸ்.டி.,யில், சாலை அல்லது பாலத்தில் பயணிப்போரிடம் வசூலிக்கும் சுங்கக் கட்டணத்திற்கு, சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், அதே சுங்கக் கட்டணத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஒப்பந்ததாரருடன் பகிர்ந்து கொள்ளும் தொகைக்கு வரி விலக்கு குறித்து, ஜி.எஸ்.டி.,யில் குறிப்பிடவில்லை. இந்த குழப்பத்தை தெளிவுப்படுத்தி, வரி விலக்கு அளிக்கப்படும் என, அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|