பதிவு செய்த நாள்
29 ஜூன்2017
22:44
புதுடில்லி : இயற்கை உணவு பொருட்களின் ஏற்றுமதியை மேம்படுத்த, தரச் சான்று முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என, மத்திய வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி வருகிறார்.அவர், இது தொடர்பாக, மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் உடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கவும், இயற்கை உணவுப் பொருட்கள் ஏற்றுமதியை மேம்படுத்தவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.இது குறித்து, ராதா மோகன் சிங் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:ரசாயனக் கலப்பில்லாத இயற்கை உரம் மற்றும் பூச்சிக் கொல்லி, மரபணு மாற்றப்படாத இயற்கை விதை ஆகியவை வாயிலான இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வகை வேளாண்மையில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு, ஒரே சான்றிதழின் கீழ், விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள், நுகர்வோர் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சமீபத்தில், இயற்கை உணவுப் பொருட்கள் விற்பனைக்கான வரைவு விதிமுறைகளை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையம் வெளியிட்டுஉள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|