பதிவு செய்த நாள்
02 ஜூலை2017
14:31
ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்ததால், ஒரு சவரன் தங்கத்துக்கு, கூடுதலாக, 440 ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், தங்க ஆபரணங்கள் மீது, ஒரு சதவீதம், 'வாட்' வரி இருந்தது. நாடு முழுவதும், ஜி.எஸ்.டி., வரி அமலுக்கு வந்துள்ளதால், தங்கம் மீது, 3 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தங்க நகைகள் வாங்க, மக்கள், கூடுதலாக செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:ஒரு கிராம் தங்கத்துக்கு, ஒரு சதவீதம், 'வாட்' வரி இருந்த போது, 27 ரூபாய் வரி செலுத்தப்பட்டது.
தற்போது, ஜி.எஸ்.டி.,யில், 3 சதவீதம் வரி விதிக்கப்படுவதால், 81 ரூபாய் செலுத்த வேண்டும். இதனால், ஒரு கிராமுக்கு, 55 ரூபாய் என, ஒரு சவரனுக்கு, கூடுதலாக, 440 ரூபாயை, மக்கள் செலுத்த வேண்டும்.முறையாக வரி செலுத்தி, நகைகளை வாங்க வேண்டும் என்ற எண்ணம், மக்களிடம் எழுந்துள்ளது. மேலும், 'நாம் செலுத்தக்கூடிய வரி, அரசாங்கத்துக்கு தான் செல்கிறது' என்ற நம்பிக்கையும், அவர்களிடம் உள்ளது. இதனால், ஜி.எஸ்.டி.,யால் கூடுதல் சுமை ஏற்பட்டாலும், தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|