டி.வி.எஸ்., – போர்டு வாகனங்கள் விலை குறைப்புடி.வி.எஸ்., – போர்டு வாகனங்கள் விலை குறைப்பு ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.79 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.79 ...
காமராஜர் துறைமுகத்தை தனியார்மயமாக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எதிர்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2017
05:03

புது­டில்லி : சென்னை அருகே, எண்­ணுா­ரில் அமைந்­துள்ள காம­ரா­ஜர் துறை­மு­கத்தை, தனி­யா­ருக்கு தாரை வார்க்­கும், ‘நிடி ஆயோக்’ அமைப்­பின் திட்­டத்­திற்கு, கப்­பல் போக்­கு­ வ­ரத்து துறை அமைச்­சர் நிதின் கட்­கரி கடும் எதிர்ப்பு தெரி­வித்து உள்­ள­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

மத்­திய திட்­டக் குழு­வுக்கு மாற்­றாக அமைக்­கப்­பட்ட, ‘நிடி ஆயோக்’ அமைப்­பின் பரிந்­து­ரையை ஏற்று, ‘ஏர் – இந்­தியா’ நிறு­வ­னத்தை தனி­யா­ருக்கு விற்­பனை செய்ய, மத்­திய அமைச்­ச­ர­வைக் குழு, சமீ­பத்­தில் ஒப்­பு­தல் அளித்­தது. இதை தொடர்ந்து, லாப­க­ர­மாக இயங்கி வரும் பொதுத் துறை­யைச் சேர்ந்த, ஷிப்­பிங் கார்ப்­ப­ரே­ஷன் நிறு­வ­னம் மற்­றும் காம­ரா­ஜர் துறை­மு­கம் உள்­ளிட்ட சில துறை­மு­கங்­க­ளை­யும் தனி­யார்­ம­ய­மாக்க, நிடி ஆயோக் பரிந்­து­ரைத்து உள்­ளது. இதற்கு, மத்­திய அமைச்­சர் நிதின் கட்­கரி தலை­மை­யி­லான, கப்­பல் போக்­கு­ வ­ரத்து அமைச்­ச­கம் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இது குறித்து, அமைச்­ச­கத்­தின் உய­ர­தி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: மத்­திய அரசு, நடப்பு நிதி­யாண்­டில், பொதுத் துறை நிறு­வன பங்கு விற்­பனை மூலம், 72,500 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்­ண­யித்து உள்­ளது. இதில், ஒரு­சில பொதுத் துறை நிறு­வ­னங்­களின் பெரும்­பான்மை பங்­கு­களை விற்­பனை செய்து, 15 ஆயி­ரம் கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது. இது­வரை, எஸ்.யு.யு.டி.ஐ., மூலம், எல் அண்டு டி நிறு­வ­னத்­தில் கொண்­டி­ருந்த பங்­கு­களை விற்­பனை செய்த வகை­யில், 6,800 கோடி ரூபாய் திரட்­டப்­பட்டு உள்­ளது.

இந்­நி­லை­யில், ஏர் – இந்­தியா, ஷிப்­பிங் கார்ப்­ப­ரே­ஷன், காம­ரா­ஜர் துறை­மு­கம் மற்­றும் இதர துறை­க­ளைச் சார்ந்த, சில பொதுத் துறை நிறு­வ­னங்­களின் பங்­கு­க­ளை­யும் விற்­பனை செய்ய, நிடி ஆயோக் பரிந்­து­ரைத்து உள்­ளது. இதை ஏற்க, அமைச்­ச­கம் மறுத்­து­விட்­டது. துறை­மு­கங்­களை நவீ­ன­ம­ய­மாக்­கும், ‘சாகர்­மாலா’ திட்­டம், உள்­நாட்டு நீர்­வழி போக்­கு­வ­ரத்து திட்­டம் ஆகி­ய­வற்றை தீவி­ர­மாக செயல்­ப­டுத்த, மத்­திய அரசு விரும்­பு­கிறது. ஆனால், அதற்கு போது­மான நிதி, பட்­ஜெட்­டில் ஒதுக்­கப்­ப­ட­வில்லை.

துறை­மு­கங்­களின் பங்கு விற்­பனை மூலம், இந்த திட்­டங்­களை முன்­னெ­டுத்­துச் செல்ல மத்­திய அரசு விரும்­பு­கிறது. ஆனால், துறை­மு­கங்­களில் இருந்து பெறப்­படும் லாபம் மூலம், கட­லோர பகு­தி­களை நவீ­ன­ம­ய­மாக்­க­வும், உள்­நாட்டு நீர்­வழி போக்­கு­வ­ரத்து வச­தி­களை ஏற்­ப­டுத்­த­வும் அமைச்­ச­கம் விரும்­பு­கிறது. கடந்த நிதி­யாண்­டில், 12 பெரிய துறை­மு­கங்­கள் மூலம், மத்­திய அர­சுக்கு, 5,000 கோடி ரூபாய் லாபம் கிடைத்­துள்­ளது. ஷிப்­பிங் கார்ப்­ப­ரே­ஷன் நிறு­வ­ன­மும், இரு ஆண்­டு­க­ளாக லாப­மீட்டி வரு­கிறது. இத்­த­கைய சூழ­லில், அந்­நி­று­வ­னங்­களை தனி­யார்­ம­ய­மாக்­கு­வது ஏற்­பு­டை­ய­தல்ல என, அமைச்­ச­கம் கரு­து­கிறது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

பங்கு மூலதனம்:
பொதுத் துறை­யைச் சேர்ந்த, ஷிப்­பிங் கார்ப்­ப­ரே­ஷன், காம­ரா­ஜர் துறை­மு­கம் ஆகிய நிறு­வ­னங்­களில், மத்­திய அரசு, முறையே, 63.75 சத­வீ­தம் மற்­றும் 66.67 சத­வீத பங்கு மூல­த­னத்தை கொண்­டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)