பதிவு செய்த நாள்
13 ஜூலை2017
23:40
மும்பை : ‘சிமென்ட் விலை, கடந்த ஆண்டை விட, 6 சதவீதம் உயரும்’ என, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ் நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தாண்டு, ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், வட இந்தியாவில், 50 கிலோ மூட்டை சிமென்ட் விலை, சராசரியாக, 283 ரூபாயாக இருந்தது. இது, கிழக்கு பிராந்தியத்தில், 292 ரூபாய்; மேற்கு பிராந்தியத்தில், 298 ரூபாய் என்ற அளவில் விற்பனையானது. தென்னிந்தியாவில், ஒரு மூட்டை சிமென்ட் விலை, சராசரியாக, 322 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
கடந்த ஆண்டை விட, இந்தாண்டு, சிமென்ட் விற்பனை, 1 சதவீதம் அதிகரிக்கும் என, தெரிகிறது. பீஹார், ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில், சாலை, குடியிருப்பு, மருத்துவமனை போன்ற திட்டங்களுக்கு, அம்மாநில அரசுகள் அதிக நிதி ஒதுக்கி உள்ளன. அதனால், கிழக்கு பிராந்தியத்தில், சிமென்ட் தேவை, 20 சதவீதம் அதிகரிக்கும். அதே சமயம், தென்னிந்தியா மற்றும் மத்திய பிராந்தியங்களில், சிமென்ட்டிற்கான தேவை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் நிலவும் குழப்பம், உ.பி.,யில், ஆற்று மணலுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு போன்றவற்றால், சிமென்ட் தேவை குறையும். எனினும், மூலப்பொருட்கள் விலை உயர்வால், சிமென்ட் விலை அதிகரிக்கும். குறிப்பாக, உயர்வகை நிலக்கரி, டீசல், பேக்கிங் போன்றவற்றுக்கான செலவினம் உயர்ந்துள்ளதால், சிமென்ட் உற்பத்திச் செலவினம், சராசரியாக, 7 சதவீதம் உயரும். இதன் காரணமாக, சிமென்ட் விலையை நிறுவனங்கள் உயர்த்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|