பதிவு செய்த நாள்
15 ஜூலை2017
16:12
புதுடில்லி : இன்டர்நெட் ஆப்ஸ்களால் 2015-16 ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.1.4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும், இது 2020 ம் ஆண்டில் ரூ.18 லட்சம் கோடி வரை உயரும் என சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பொருளாதார உறவுகள் மற்றம் பிராட்பாண்ட் குழுமத்திற்கான இந்திய ஆய்வு கழகம் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு அறிக்கையை மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா வெளியிட்டார். அதில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்டர்நெட் பெரிதும் துணை நிற்கிறது. இன்டர்நெட் மூலமே பல பொருளாதார ஆலோசனைகள் நடைபெறுகிறது.
2020 ம் ஆண்டில் இணையதள பொருளாதாரம் மூலம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 537.4 பில்லியன் டாலர்களை பெறும். இதில் ஆப்ஸ்கள் மூலம் குறைந்தபட்சம் 270.9 பில்லியன் டாலர்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|