பதிவு செய்த நாள்
24 ஜூலை2017
18:22
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக வாரத்தின் முதல்நாளில் புதிய உச்சத்தை எட்டின. சென்செக்ஸ் 32,200 புள்ளிகளை கடந்தும், நிப்டி 10 ஆயிரம் புள்ளிகளை நெருங்கி கொண்டிருக்கின்றன.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், நாட்டின் முன்னணி நிறுவன பங்குகள் உயர்வுடன் இருந்தது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருந்தன.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 107.02 புள்ளிகள் உயுர்ந்து 32,135.91-ஆகவும், நிப்டி 24.05 புள்ளிகள் உயர்ந்து 9,939.30-ஆகவும் வர்த்தகமான நிலையில், நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 188.87 புள்ளிகள் உயர்ந்து 32,217-ஆகவும், நிப்டி 48.80 புள்ளிகள் உயர்ந்து 9,963.40-ஆகவும் வர்த்தகமாகின. வர்த்தகம் முடியும் தருவாயில் சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்தன. அதோடு, நிப்டி 10000 புள்ளிகளை நெருங்கியது. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 216.98 புள்ளிகள் உயர்ந்து 32,245.87-ஆகவும், நிப்டி 51.15 புள்ளிகள் உயர்ந்து 9,966.40-ஆகவும் முடிந்தன. இதுவும் பங்குச்சந்தையில் ஒரு புதிய உச்சமாகும்.
இன்றைய வர்த்தகத்தில் பார்தி ஏர்டெல், எப்எம்சிஜி., ஐடிசி., டிசிஎஸ்., விப்ரோ, இன்போசிஸ், எஸ்பிஐ., உள்ளிட்ட பல முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்தன.
100 பங்குகள் புதிய உச்சம்
மேலும் இன்றை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் உள்ள பங்குகளில் 100 பங்குகள், கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|