தங்கம் விலை சிறிதளவு உயர்வுதங்கம் விலை சிறிதளவு உயர்வு ... ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம் ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 32,200 புள்ளிகளை தொட்டு சாதனை: நிப்டி 10 ஆயிரத்தை நெருங்குகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2017
18:22

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக வாரத்தின் முதல்நாளில் புதிய உச்சத்தை எட்டின. சென்செக்ஸ் 32,200 புள்ளிகளை கடந்தும், நிப்டி 10 ஆயிரம் புள்ளிகளை நெருங்கி கொண்டிருக்கின்றன.

ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், நாட்டின் முன்னணி நிறுவன பங்குகள் உயர்வுடன் இருந்தது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருந்தன.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 107.02 புள்ளிகள் உயுர்ந்து 32,135.91-ஆகவும், நிப்டி 24.05 புள்ளிகள் உயர்ந்து 9,939.30-ஆகவும் வர்த்தகமான நிலையில், நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 188.87 புள்ளிகள் உயர்ந்து 32,217-ஆகவும், நிப்டி 48.80 புள்ளிகள் உயர்ந்து 9,963.40-ஆகவும் வர்த்தகமாகின. வர்த்தகம் முடியும் தருவாயில் சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்தன. அதோடு, நிப்டி 10000 புள்ளிகளை நெருங்கியது. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 216.98 புள்ளிகள் உயர்ந்து 32,245.87-ஆகவும், நிப்டி 51.15 புள்ளிகள் உயர்ந்து 9,966.40-ஆகவும் முடிந்தன. இதுவும் பங்குச்சந்தையில் ஒரு புதிய உச்சமாகும்.

இன்றைய வர்த்தகத்தில் பார்தி ஏர்டெல், எப்எம்சிஜி., ஐடிசி., டிசிஎஸ்., விப்ரோ, இன்போசிஸ், எஸ்பிஐ., உள்ளிட்ட பல முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்தன.

100 பங்குகள் புதிய உச்சம்
மேலும் இன்றை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் உள்ள பங்குகளில் 100 பங்குகள், கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)