பதிவு செய்த நாள்
29 ஜூலை2017
10:28
புதுடில்லி : வரத்து குறைவால் நாடு முழுவதும் வெங்காயம் மற்றும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன. டில்லி, கோல்கட்டா, இந்தூர், திருவனந்தபுரம், சென்னை உள்ளிட்ட நாட்டின் 17 முக்கிய நகரங்களில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.90 ஐ தாண்டி உள்ளது.
பெரும்பாலான வட மாநிலங்களில் நிலவி வரும் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக வெங்காயம் மற்றும் தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சந்தைகளுக்கு வரத்து குறைந்துள்ளதே விண்ணை முட்டும் அளவிற்கு விலை உயர்ந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலை உடனடியாக சரியாக வாய்ப்பில்லை எனவும், ஆகஸ்ட் இறுதி வரை இதே விலை நிலவரம் தான் காணப்பட வாய்ப்பு இரப்பதாகவும் கூறப்படுகிறது.
வெங்காய விலை கடந்த 19 மாதங்களில் குவிண்டாலுக்கு ரூ.1300 வரை அதிகரித்துள்ளது. இருப்பு வைத்திருந்த ஒரு சில விவசாயிகளும் பணத் தேவைக்காக வெங்காயத்தை விற்று விட்டதால், மழை மற்றும் வெள்ள நிலை சரியாகி, மீண்டும் உற்பத்தி துவங்கிய பிறகு தான் நிலைமை சரியாகும் என வேளாண் உற்பத்தி சந்தைக்குழு தெரிவித்துள்ளது.
வெங்காய வரத்து நாள் ஒன்றிற்கு 25,000 குவிண்டாலில் இருந்து 12,000 குவிண்டாலாக குறைந்துள்ளது. டில்லியில் கடந்த 3 மாதங்களுக்கு முன் ரூ.26 ஆக இருந்த ஒரு கிலோ தக்காளியின் விலை தற்போது ரூ.92 க்கு விற்கப்படுகிறது. கடந்த 2 மாதத்தில் தக்காளி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது சாமானிய மக்களை வேதனை அடைய வைத்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் சென்னையில் தக்காளி விலை 5 மடங்கும், பெங்களூருவில் 6 மடங்கும், கோல்கட்டாவில் 9 மடங்கும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|