பதிவு செய்த நாள்
06 ஆக2017
01:55
புதுடில்லி:‘நிறுவனங்கள் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நிறுவனங்களில், 33 சதவீத நிறுவனங்கள், வருமான வரித்துறையின் தகவல் தொகுப்பில் இடம் பெறவில்லை’ என, பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்ட, மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்:கடந்த, 2012 – 16ம் நிதியாண்டுகளில், நிறுவனங்கள் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த நிறுவனங்களுக்கு ஏற்ப, வருமான வரித்துறையின், கணினி ஒருங்கிணைப்பு, போக்குவரத்து, ஆய்வு மற்றும் புள்ளியியல் பிரிவுகள் அளித்த பட்டியல் இல்லை. அவற்றுக்கு இடையே, 2.94 லட்சம் – 3.94 லட்சம் வரை வித்தியாசம் உள்ளது. அதாவது, பதிவு செய்த நிறுவனங்களில், 33 சதவீத நிறுவனங்கள், வருமான வரித்துறை பட்டியலில் இல்லை.
இந்நிறுவனங்கள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாமலோ அல்லது தாக்கல் செய்வதைநிறுத்தியோ இருக்கலாம்.இனி, இது போன்று நடக்காமல்இருக்க, நிறுவனங்கள் வருமான கணக்கை தாக்கல் செய்யாததற்கு, சம்பந்தப்பட்ட பகுதியின் வரி அலுவலரை பொறுப்பாக்கும் வகையில், வருமான வரித்துறை செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|