பதிவு செய்த நாள்
08 ஆக2017
00:18
சார், நாங்கள் ஓவியக் கண்காட்சி கூடம் நடத்தி வருகிறோம். தற்போது, குறிப்பிட்ட ஓவியங்களை, வெளிநாட்டில் நடைபெறும் கண்காட்சி கூடத்திற்கு எடுத்துச் செல்ல உள்ளோம். 20 நாட்களுக்கு பின், அவற்றை திரும்ப கொண்டு வந்து விடுவோம். இத்தகைய பரிவர்த்தனை ஏற்றுமதியாக கருதப்படுமா? சிலர், இவ்வாறு செய்ய அனுமதி இல்லை என, கூறுகின்றனர். குழப்பமாக உள்ளது. தங்களின் ஆலோசனை தேவை.– சிந்தனா ஆர்ட்ஸ், புதுச்சேரி
நீங்கள், காட்சிக்காக வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லும் ஓவியத்திற்கு வரி இல்லை. நீங்கள் கொண்டு செல்லலாம். பொருட்களை எடுத்துச் செல்லும் போது, வெளிநாட்டில் நடக்கும் கண்காட்சியின் விபரத்தை ஆதாரமாக சமர்ப்பிக்கலாம். இதற்கு தடை ஒன்றுமில்லை. நீங்கள் நடைமுறையில் உள்ள, சுங்க வரி சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும்.
சார், நாங்கள் உள்ளீட்டு வரி பயன் பெற, பொருட்களை வாங்கியதிலிருந்து எத்தனை நாட்களுக்குள் விற்பனையாளருக்கு பணம் செலுத்த வேண்டும்?– ஜெயவேல், கம்பம்நீங்கள், பொருட்களுக்கான பணத்தை செலுத்திய பின் தான், உள்ளீட்டு வரி பயன் பெற வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கு முன்னரே, உள்ளீட்டு வரி பயனை பெற்று விடலாம். ஆனால், வழங்கல் நடந்த தேதியிலிருந்து, 180 நாட்களுக்குள், அதற்கான பணத்தை வழங்குனருக்கு செலுத்தியிருந்தால் மட்டுமே, தங்களின் உள்ளீட்டு வரி பயன் உறுதி செய்யப்படும்.
நிலக்கரி மீது ஏற்கனவே செலுத்தியிருந்த, ‘கிளீன் எனர்ஜி செஸ்’ வரியை, ஜி.எஸ்.டி., வந்தபின், உள்ளீட்டு வரி பயனாக பெற்றுக் கொள்ள முடியுமா?– செந்தில், வடலுார்நீங்கள் செலுத்திய, ‘க்ரீன் செஸ்’ எனப்படும், ‘கிளீன் எனர்ஜி செஸ்’ வரியை, உள்ளீட்டு வரி பயனாக பெற முடியாது.
சார், முதலில் நான், என் பெயரில் சேவை வரி பதிவு செய்திருந்தேன். ‘மைக்ரேஷன்’ முறையில், தற்காலிக பதிவு எண் பெற்று விட்டேன். இப்போது, ஜி.எஸ்.டி., பதிவை, என் நிறுவனத்தின் பெயரில் மாற்ற முடியுமா?– ரங்கநாதன், விருதுநகர்ஒரே, ‘பான்’ எண் உள்ள உங்கள் நிறுவனத்தின் பெயரில், மாற்றம் செய்து கொள்ளலாம். நீங்கள், ஆர்.இ.ஜி., 26 எனும் படிவத்தில், உங்களின் தற்காலிக பதிவை நிரந்தர பதிவாக மாற்றும் போது, பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.
சார், நாங்கள் அச்சகம் ஒன்றை நடத்தி வருகிறோம். எழுத்தாளர்கள் எங்களிடம் பதிப்பிற்கான விஷயத்தை தந்து விடுவர். நாங்கள் காகிதத்தை கொள்முதல் செய்து, அவற்றை, ‘பிரின்ட்’ செய்து, புத்தகமாக திரும்ப அளிக்கிறோம். இதற்கு, எத்தனை சதவீதம் வரி விதிக்க வேண்டும்?– ரவி, சென்னைஇதற்கான வரியை, தற்போது குறைத்துள்ளனர். துவக்கத்தில், 18 சதவீத வரியிலிருந்த இத்தகைய சேவைக்கு, தற்போது, 12 சதவீதம் மட்டுமே வரி விதிக்க, ஜி.எஸ்.டி., சபை முடிவு செய்துள்ளது.
நாங்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறோம். சில நேரங்களில், வெளி மாநிலத்தில் உள்ள எங்களுடைய வாடிக்கையாளர்கள், தமிழகத்தில் உள்ள அவர்களுடைய முகவர்களுக்கு, சரக்குகளை நேரடியாக எங்கள் மூலம் அனுப்ப சொல்வர். நாங்கள், வெளி மாநில வாடிக்கையாளர்களுக்கு, ‘பில்’ அனுப்பி விடுவோம். இத்தகைய நடைமுறை ஜி.எஸ்.டி., வந்தபின் சாத்தியமா? விரிவாக விளக்கவும்.– சோம பிரபன், ஓசூர்நல்ல கேள்வி. இத்தகைய பரிவர்த்தனையை, நீங்கள் தாராளமாக செய்யலாம். ஆனால், நீங்கள் இதற்கான வரி விதிப்பை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் பொருட்களை, உள் மாநிலத்தில்உள்ள நபர்களுக்கு அளித்தாலும், வெளி மாநிலத்திலுள்ள உங்களுடைய வாடிக்கையாளருக்கு, ‘பில்’ செய்யும் காரணத்தால், இது வெளி மாநில வழங்கலாக கருதப்படும். எனவே, நீங்கள் ஒருங்கிணைந்த, ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்டும்.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|