பதிவு செய்த நாள்
08 ஆக2017
00:20
புதுடில்லி : இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கை: கடந்த, ஏப்., – ஜூலை வரை, கண்ட்லா, மும்பை, சென்னை, எண்ணுார் உள்ளிட்ட நாட்டின் முக்கிய, 12 துறைமுகங்களில், அதிகளவில், இரும்புத் தாது, பெட்ரோலிய பொருட்கள் ஆகியவற்றுடன், பெருமளவு சரக்கு பெட்டகங்களும் கையாளப்பட்டு உள்ளன.
இதனால், மதிப்பீட்டு காலத்தில், இந்த துறைமுகங்கள் சரக்குகளை கையாண்டது, 4.13 சதவீதம் அதிகரித்து, 22.19 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 21.31 கோடி டன்னாக இருந்தது. இதில், குஜராத்தைச் சேர்ந்த, கண்ட்லா துறைமுகம் அதிகபட்சமாக, 3.61 கோடி டன் சரக்குகளை கையாண்டு, முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்த இடத்தில், ஒடிசாவின் பாரதீப் மற்றும் மும்பை துறைமுகங்கள் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாட்டின், மொத்த சரக்கு போக்குவரத்தில், முக்கிய, 12 துறைமுகங்களின் பங்கு, 61 சதவீதமாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|