கரன்சி நிலவரம்கரன்சி நிலவரம் ... 35 கோடி மொபைல் போன் விற்பனை கடந்த ஆண்டை விஞ்சி சாதனை 35 கோடி மொபைல் போன் விற்பனை கடந்த ஆண்டை விஞ்சி சாதனை ...
ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2017
23:59

* நான், பட்­டய கணக்­கா­ள­ராக உள்­ளேன். ஜி.எஸ்.டி., வரு­வ­தற்கு முன் வழங்­கிய விலைப் பட்­டி­ய­லில், சேவை வரி விதித்­தி­ருந்­தோம். அதற்­கான தொகை தற்­போது தான் வந்­துள்­ளது. இப்­போது வசூ­லித்த தொகையை, ஜி.எஸ்.டி.,யாக செலுத்த வேண்­டுமா அல்­லது சேவை வரி­யாக செலுத்த வேண்­டுமா?– முர­ளி­த­ரன், சென்னை
சேவை வரி­யாக, நீங்­கள் வசூ­லித்த தொகையை​,​ சேவை வரி­யாக தான் செலுத்த வேண்­டும். அதற்கு, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­பட மாட்­டாது.

* சார், காம்­போ­சிட் வழங்­கல் என்­றால் என்ன? இதை விப­ர­மாக விளக்­க­வும்.– வெங்­க­டாச்­ச­லம், பரங்­கி­மலை
பதிவு செய்­யப்­பட்ட நப­ரால், இரண்டோ அல்­லது அதற்கு மேற்­பட்ட வரி விதிக்­கக்­கூ­டிய சரக்கை அல்­லது சேவையை வழங்­கும் போது, அதில் ஒன்றை முதன்மை வழங்­க­லா­கக் கொண்டு, மற்­றொன்றை இணைத்து அல்­லது அதை சார்ந்து வழங்­கும் வழங்­கல், கூட்டு வழங்­கல் (காம்­போ­சிட் வழங்­கல்) என, கூறப்­ப­டு­கிறது.உதா­ர­ண­மாக, சரக்­கு­களை விற்­பனை செய்து அனுப்­பும் போது, போக்­கு­வ­ரத்து மற்­றும் காப்­பீட்டு தொகை போன்ற சேவை­களும் சேர்ந்து வழங்­கும் வழங்­க­லா­னது, கூட்டு வழங்­க­லா­கும். இந்த பரி­வர்த்­த­னை­யில், சரக்­கு­களின் வழங்­கல் முதன்மை வழங்­க­லா­க­வும், அதை சார்ந்த இதர சேவை­கள், இணைப்பு வழங்­க­லா­க­வும் கரு­தப்­படும்.

* சார், நான், ஜி.எஸ்.டி., பதிவு செய்­து­விட்­டேன். என் வணிக கட்­ட­டத்தை வாட­கைக்கு விட்­டுள்­ளேன். அதில், 9 வணி­கர்­கள் கடை நடத்தி வரு­கின்­ற­னர். இவர்­கள் யாரும், ஜி.எஸ்.டி., பதிவு பெற­வில்லை. ஏனெ­னில் அவர்­க­ளது மொத்த வரு­மா­னம், 20 லட்­சம் ரூபாய்க்­கும் குறை­வாக உள்­ளது. பதிவு செய்­யாத வணி­கர்­க­ளி­ட­மி­ருந்­தும், ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்­டுமா?– மீனா ரகு, நங்­க­நல்­லுார்
வணிக கட்­ட­டத்தை வாட­கைக்கு விடும் போது அதற்கு, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­படும். தங்­க­ளு­டைய வாட­கை­தா­ரர்­களின், ஜி.எஸ்.டி., பதிவை ​கருத்­தில் கொள்ள தேவை­யில்லை. அவர்­கள் பதிவு செய்­யா­விட்­டா­லும், நீங்­கள், ஜி.எஸ்.டி., வசூ­லித்து அர­சுக்கு செலுத்த வேண்­டும்.

* நாங்­கள், ஏற்­க­னவே, ‘வாட்’ பதிவு செய்­தி­ருந்­தோம். அத­னால், ‘மைக்­ரே­ஷன்’ முறை­யில், ஜி.எஸ்.டி., தற்­கா­லிக பதி­வும் செய்­து­விட்­டோம். இந்த பதிவை ரத்து செய்ய தவணை தேதி உள்­ளதா?– ஜான், நெல்லை
ஆம். நீங்­கள் பெற்ற தற்­கா­லிக பதிவை ரத்து செய்­வ­தற்­கான தவ­ணைக் கெடு, தற்­போது நீட்­டிக்­கப்­பட்டு உள்­ளது. நீங்­கள், செப்., 30க்குள் பதிவை ரத்து செய்­வ­தற்­காக விண்­ணப்­பிக்­க­லாம்.

* சார், நாங்­கள், திரு­வண்­ணா­ம­லை­யில் அறக்­கட்­டளை நடத்தி வரு­கி­றோம். அதில், இல­வ­ச­மாக உண­வ­ளித்து வரு­கி­றோம். இதற்கு, ஜி.எஸ்.டி., ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில் செலுத்த வேண்­டும் என, கூறு­கின்­ற­னர். தங்­களின் ஆலோ­ச­னைக்­காக காத்­தி­ருக்­கி­றோம்.– சதா­சி­வம், திரு­வண்­ணா­மலை
உங்­க­ளு­டைய சேவைக்கு, என் மன­மார்ந்த பாராட்­டு­கள். நீங்­கள் மேற்­கூ­றிய பரி­வர்த்­த­னைக்கு, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­பட மாட்­டாது. மேலும், நீங்­கள், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில் வரி செலுத்த தேவை­யில்லை.

* தற்­போது, ஜூன் மாதத்­திற்­கு­ரிய சேவை வரிக்­கான, ‘ரிட்­டர்ன்’ தாக்­கல் செய்ய முடி­யுமா?– பிர­சன்னா, கும்­ப­கோ­ணம்
2017 ஏப்., – ஜூன் வரை அளித்த சேவைக்கு, சேவை வரி தாக்­கல், எஸ்.டி., 3 படி­வத்­தில், 15ம் ​தேதிக்­குள் தாக்­கல் செய்ய வேண்­டும்.

-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)