பதிவு செய்த நாள்
12 ஆக2017
16:10
மும்பை : பங்குச்சந்தையில் கடந்த 4 வர்த்தக நாட்களில், முதலீட்டாளர்கள் 6.4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தையின் மொத்த சந்தை மூலதன மதிப்பு ஜூலை 6ஆம் தேதி 133 லட்சம் கோடியாக இருந்தது. இது, 23 வர்த்தக நாட்களில் படிப்படியாக உயர்ந்து ஆகஸ்ட் 7ஆம் தேதி 139.5 லட்சம் கோடியாக உயர்ந்தது. இந்நிலையில், டோக்லம் பீடபூமியில் இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு, பெயரளவுக்கான 331 நிறுவனங்கள் வர்த்தகத்தில் ஈடுபட செபி விதித்த தடை, கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாயில் ஏற்பட்ட சரிவு, சர்வதேச அளவில் அமெரிக்கா-வடகொரியா இடையேயான மோதல் போக்கு என பல்வேறு காரணங்களால், கடந்த வாரத்தில் இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டது.
கடந்த ஒரு வாரத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஆயிரத்து 100 புள்ளிகளை இழந்தது. இதனால் 4 வர்த்தக நாட்களில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் 6.4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|